ETV Bharat / state

வண்டலூருக்கு அடுத்த பெரிய உயிரியல் பூங்கா அமைக்கும் தன்மை குரும்பப்பட்டியில் உள்ளது- சேலம் எம்.பி

சேலம்: சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பிறகு பெரிய உயிரியல் பூங்கா அமைப்பதற்கான சூழல் சேலத்தில் மட்டுமே உள்ளதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 4, 2020, 11:18 AM IST

dmk mp parthipan inspect salem kuruvampatti park
dmk mp parthipan inspect salem kuruvampatti park

சேலம் மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டிலேயே இயற்கையாக ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியோடு ஒன்றிணைந்துள்ளது, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா. வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று இயற்கைச் சூழலுடன் கூடிய உயிரியல் பூங்கா இல்லை.

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பிறகு பெரிய உயிரியல் பூங்கா அமைப்பதற்கான சூழல் சேலத்தில் மட்டுமே உள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா செயற்கையாக அமைக்கப்பட்டது. ஆனால்,சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையாகவே அமைந்திருக்கிறது‌.

சேலம் மாநகர மையப்பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் மான், குரங்கு, நரி, மலைப்பாம்பு, பறவைகள் போன்ற குறிப்பிட்ட அளவில் மட்டுமே வன விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி 100 ஹெக்டேர் பரப்பளவில் சிங்கம், புலி, யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் பூங்காவாக மாற்றலாம். இதனால் இந்த இடம் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும்.

இதன் மூலம் சேலத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும். பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோர்களுக்கு அறிவினை மேம்படுத்துவதற்கும், மன அமைதி கிடைப்பதற்கும் பெரும் உதவியாக இந்தப் பூங்கா அமையும். பூங்காவை விரிவுபடுத்துவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வனத்துறை அலுவலர்களிடம் கோரியுள்ளேன்.

இன்னும் ஓர் ஆண்டிற்குள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தப் பூங்காவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எதிர்வரும் காலங்களில் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இதற்கு ஒதுக்கப்படும்' என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது சேலம் ஒன்றியச் செயலாளர் ரெயின்போ நடராஜன், சேலம் மாநகர சிறுபான்மை அமைப்பாளர் விக்டர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:பார்வையாளர்களைக் கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

சேலம் மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டிலேயே இயற்கையாக ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியோடு ஒன்றிணைந்துள்ளது, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா. வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று இயற்கைச் சூழலுடன் கூடிய உயிரியல் பூங்கா இல்லை.

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பிறகு பெரிய உயிரியல் பூங்கா அமைப்பதற்கான சூழல் சேலத்தில் மட்டுமே உள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா செயற்கையாக அமைக்கப்பட்டது. ஆனால்,சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையாகவே அமைந்திருக்கிறது‌.

சேலம் மாநகர மையப்பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் மான், குரங்கு, நரி, மலைப்பாம்பு, பறவைகள் போன்ற குறிப்பிட்ட அளவில் மட்டுமே வன விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி 100 ஹெக்டேர் பரப்பளவில் சிங்கம், புலி, யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் பூங்காவாக மாற்றலாம். இதனால் இந்த இடம் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும்.

இதன் மூலம் சேலத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும். பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோர்களுக்கு அறிவினை மேம்படுத்துவதற்கும், மன அமைதி கிடைப்பதற்கும் பெரும் உதவியாக இந்தப் பூங்கா அமையும். பூங்காவை விரிவுபடுத்துவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வனத்துறை அலுவலர்களிடம் கோரியுள்ளேன்.

இன்னும் ஓர் ஆண்டிற்குள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தப் பூங்காவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எதிர்வரும் காலங்களில் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இதற்கு ஒதுக்கப்படும்' என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது சேலம் ஒன்றியச் செயலாளர் ரெயின்போ நடராஜன், சேலம் மாநகர சிறுபான்மை அமைப்பாளர் விக்டர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:பார்வையாளர்களைக் கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.