ETV Bharat / state

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்களில் வெடிகுண்டு சோதனை!

சேலம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சேலத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Aug 14, 2019, 3:23 PM IST

ரயில்களில் வெடிகுண்டு சோதனை

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதையடுத்து, சேலத்தில் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் வெடிகுண்டு சோதனை
சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஜங்ஷன் வந்தடைந்தது. இதில் சேலம் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் 'ஏரி மெட்டல் டிடெக்டர்' கருவிகளைப் பயன்படுத்தி பயணிகளை சோதனையிட்டனர். இதனால் ரயில் நிலையங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரயில் நிலையம், தண்டவாளங்களிலும் போலீசார் முழு பரிசோதனையில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதையடுத்து, சேலத்தில் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் வெடிகுண்டு சோதனை
சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஜங்ஷன் வந்தடைந்தது. இதில் சேலம் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் 'ஏரி மெட்டல் டிடெக்டர்' கருவிகளைப் பயன்படுத்தி பயணிகளை சோதனையிட்டனர். இதனால் ரயில் நிலையங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரயில் நிலையம், தண்டவாளங்களிலும் போலீசார் முழு பரிசோதனையில் ஈடுபட்டனர்.
Intro:கோவை எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு சோதனை.


Body:சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் எதுவும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வருகிறார்கள்.

இதேபோல சேலத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் சேலம் மாநகர பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் தற்பொழுது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஜங்ஷன் வந்த பிறகு இதில் சேலம் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஏரி மெட்டல் டிடெக்டர் கருவிகள் பயன்படுத்தி சோதனை செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் ரயில் நிலையம் முழுவதும் சோதனை செய்து கண்காணித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.