புதிய பார்வை கூட்டணி என்னும் அமைப்பினர், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்பட உள்ள மாவட்டங்கள் வழியாக இரண்டு நாள் தேர்தல் பரப்புரையை தொடங்கினர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த வலசையூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட புதிய பார்வை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் க. சக்திவேல் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ‘வேளாண் நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது. அதனால் எட்டு வழி சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் கைவிடவேண்டும். மேலும் எம்எஸ் சுவாமிநாதன் குழுவின் விவசாயிகளுக்கான பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: ஆம்பூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்!