ETV Bharat / state

கால்நடை மருத்துவரை தாக்கிய மருத்துவ ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Sep 24, 2019, 10:26 PM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் கால்நடை மருத்துவரை தாக்கிய கால்நடை ஆய்வாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர் மெய்யரசன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் மெய்யரசன்(25). இதே மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராக கவுதம்(35) என்பவர் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம் குறித்து, கால்நடை மருத்துவருக்கும், ஆய்வாளருக்கும் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கவுதம், கால்நடை மருத்துவர் மெய்யரசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர் மெய்யரசன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கவுதமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கால்நடை ஆய்வாளர் கவுதமை கைது செய்யக் கோரி ராமநாதபுரம் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் மெய்யரசன்(25). இதே மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராக கவுதம்(35) என்பவர் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம் குறித்து, கால்நடை மருத்துவருக்கும், ஆய்வாளருக்கும் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கவுதம், கால்நடை மருத்துவர் மெய்யரசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர் மெய்யரசன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கவுதமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கால்நடை ஆய்வாளர் கவுதமை கைது செய்யக் கோரி ராமநாதபுரம் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

Intro:இராமநாதபுரம்
செப்.24

முதுகுளத்தூரில் கால்நடை மருத்துவரை தாக்கிய கால்நடை ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு.Body:இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக மெய்யரசன்(25), கால்நடை ஆய்வாளராக கவுதம்(35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம் குறித்து, கால்நடை மருத்துவருக்கும், ஆய்வாளருக்கும் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கவுதம், சரமாரியாக தாக்கியதில் மருத்துவர் மெய்யரசன் காயமடைந்தார். காயமடைந்த மருத்துவர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக மருத்துவர் அளித்த புகாரின் பேரில், முதுகுளத்தூர் போலீஸார் கால்நடை ஆய்வாளர் கவுதம் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கால்நடை ஆய்வாளர் கவுதமை கைது செய்யக்கோரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.