ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் உறங்கிய இருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உறங்கிய நிலையில் ஆண், பெண் யாசகர்கள் இருவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Jan 17, 2021, 3:59 PM IST

பேருந்து நிலையத்தில் உறங்கிய  இருவர் உயிரிழப்பு
பேருந்து நிலையத்தில் உறங்கிய இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் அமரும் பகுதியில் ஒரு ஆணும், பெண் ஒருவரும் இன்று (ஜன.17) காலை, உறங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.

இதுகுறித்து, பேருந்து ஏற வந்த பயணிகள் கேணிக்கரை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இறந்த ஆணும், பெண்ணும் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று சுற்றித்திரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

யாசகர்கள் இருவரும் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ. 1.34 லட்சம் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் அமரும் பகுதியில் ஒரு ஆணும், பெண் ஒருவரும் இன்று (ஜன.17) காலை, உறங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.

இதுகுறித்து, பேருந்து ஏற வந்த பயணிகள் கேணிக்கரை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இறந்த ஆணும், பெண்ணும் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று சுற்றித்திரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

யாசகர்கள் இருவரும் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ. 1.34 லட்சம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.