ETV Bharat / state

கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது - மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Aug 18, 2019, 11:26 AM IST

ராமநாதபுரம் :1600 மெகா வாட் திறன் கொண்ட ஊப்பூர் அனல் மின் நிலையத்துக்கு, கடல் நீரை எடுத்துச்செல்ல, கடலினுள் 7.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது

ராமநாதபுரம் மாவட்டம் ஊப்பூர் அருகே செயல்பட்டு வரும் 1600 மெகா வாட் திறன் கொண்ட ஊப்பூர் அனல் மின் நிலையத்துக்கு கடல் நீரை எடுத்துச்செல்ல கடலினுள் 7.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இது பற்றி மீனவ கிராம மக்களுக்கு எந்த அறிவிப்பும் தெரியப்படுத்தவில்லை. இதனால் கடலை நம்பி தொழில் செய்யும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடந்த 15ஆம் தேதி ஊப்பூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கருப்புப் பட்டை அணிந்து தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அலுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம மக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது - மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் ஊப்பூர் அனல்மின் நிலைய அலுவலர்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் வரும் 22ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும், அதுவரை கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது என்றும் ஆட்சியர் வீர ராகவ ராவ் கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஊப்பூர் அருகே செயல்பட்டு வரும் 1600 மெகா வாட் திறன் கொண்ட ஊப்பூர் அனல் மின் நிலையத்துக்கு கடல் நீரை எடுத்துச்செல்ல கடலினுள் 7.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இது பற்றி மீனவ கிராம மக்களுக்கு எந்த அறிவிப்பும் தெரியப்படுத்தவில்லை. இதனால் கடலை நம்பி தொழில் செய்யும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடந்த 15ஆம் தேதி ஊப்பூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கருப்புப் பட்டை அணிந்து தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அலுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம மக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது - மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் ஊப்பூர் அனல்மின் நிலைய அலுவலர்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் வரும் 22ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும், அதுவரை கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது என்றும் ஆட்சியர் வீர ராகவ ராவ் கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.17
உப்பூர் அனல் மின் நிலையப் பாலம் கட்டும் பணி 22 தேதி வரை நிறுத்தி வைப்பு ஆட்சியர்.Body:இராமநாதபுரம்
மாவட்டம் ஊப்பூர் அருகே உள்ள மோர்பண்ணை கிராம மக்கள், 1600 மெகா வாட் திறன் கொண்ட ஊப்பூர் அனல் மின் நிலையத்திற்க்கு கடல் நீரை எடுத்துச் செல்ல கடலினுள் சுமார் 7.6 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கினர். இது பற்றி எந்த அறிவிப்பு அப்பகுதியில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இதனால் கடலை நம்பி தொழில் செய்யும் 20 கிராம மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் அதை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் வேண்டும் என கடந்த 15 தேதி ஊப்பூர் அரசு பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கருப்புப் பட்டை அணிந்து தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வி முடிந்தது,
மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம மக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலை அமைதிப் பேச்சு வார்த்தை கிராமத் தலைவர், ஊப்பூர் அனல்மின் நிலைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதில் வரும் 22 ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறுமென்றும் அதுவரை கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.