ETV Bharat / state

7 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்! - நீதிமன்றம்

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீன்வர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மீனவர்கள் ஏழு பேர் விடுவிப்பு
author img

By

Published : Aug 8, 2019, 7:59 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி நின்றது. அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் அவர்கள் பயன்படுத்திய படகையும் சிறைப்பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை ஒரு வார காலம் வவுனியா சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏழு மீனவர்களையும் விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 17ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி நின்றது. அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் அவர்கள் பயன்படுத்திய படகையும் சிறைப்பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை ஒரு வார காலம் வவுனியா சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏழு மீனவர்களையும் விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 17ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Intro:இராமநாதபுரம்
ஆக்.8

நிபந்தனையுடன் 7 இராமேஸ்வரம் மீன்வர்களை இலங்கை நீதிமன்றம் விடுவிப்பு.


Body:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு பழுதாகி நின்றது.
அப்பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஜோசப் பால்ராஜ், பெனிட்டோ, நாகராஜ், இன்னாசி, சுப்பிரமணி, முனியசாமி, சத்தியசீலன் ஆக 7 மீனவர்களை மற்றும் அவர்கள் பயன்படுத்திய துரைசிங்கம் என்பவருக்கு சொந்தமான படகையும் பிடித்துச் சென்று வழக்குப்பதிவு செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். நீதிமன்றம் ஒரு வார காவல் வைக்க தீர்ப்பு வழங்கியது.

மீனவர்களுக்கான காவல் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை விசாரித்த நீதிபதி பகுதி இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களின் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 17ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கூறி வழக்கை ஒத்திவைத்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.