ETV Bharat / state

தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன்குளம் கிராமம்! - Alagan kulam Village

ராமநாதபுரம்: சரியான நேரத்தில் ஊரணி குளம் துர்வாரப்பட்டதால் தண்ணீர் பிரச்னையின்றி வாழும் அழகன்குளம் கிராம மக்கள், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க குளங்களைத் துர்வார வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன் குளம் கிராம மக்கள்..
author img

By

Published : Jul 1, 2019, 7:20 AM IST

தமிழ்நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்கையில் தண்ணீர் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீருக்காக கிராம மக்கள் தள்ளு வண்டிகளுடன் நீண்ட தூரம் சென்று தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால், அதே ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஊரணி குளத்தில் இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன் குளம் கிராம மக்கள்..

இந்த ஊரணி குளம் தண்ணீர் மூலம் அருகே உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இது குறித்து ஊர் நம்மிடம் பேசிய ஊர் பொதுமக்கள், “100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊரணியை கிராம மக்கள் தூர்வாரினர். இதனால் வறட்சியான காலங்களிலும் இந்த ஊரணியில் நீர் உள்ளது. இதேபோல், அனைவரும் அவர்களது பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களை முறையாக தூர்வாரினால் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்” என கருத்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்கையில் தண்ணீர் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீருக்காக கிராம மக்கள் தள்ளு வண்டிகளுடன் நீண்ட தூரம் சென்று தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால், அதே ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஊரணி குளத்தில் இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன் குளம் கிராம மக்கள்..

இந்த ஊரணி குளம் தண்ணீர் மூலம் அருகே உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இது குறித்து ஊர் நம்மிடம் பேசிய ஊர் பொதுமக்கள், “100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊரணியை கிராம மக்கள் தூர்வாரினர். இதனால் வறட்சியான காலங்களிலும் இந்த ஊரணியில் நீர் உள்ளது. இதேபோல், அனைவரும் அவர்களது பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களை முறையாக தூர்வாரினால் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்” என கருத்து தெரிவித்தனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூன்.30

முறையாக ஊரணியை தூர்வாரியதால் தப்பிய அழகன் குளம் கிராம மக்கள்.


Body:தமிழக முழுவதும் தண்ணீர் பிரச்சனை மக்கள் அன்றாட வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலைதான் இராமநாதபுர மாவட்டத்திலும் தண்ணீருக்காக கிராம மக்கள் தள்ளு வண்டிகளுடன் நீண்ட தூரம் சென்று தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. சிலர் நீரை காசு கொடுத்து வங்கி பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் என்ற கிராமத்தில் சூரிய நகரின் அருகே உள்ள ஊரணி தற்போதுள்ள கடுமையான வறட்சியிலிம் 2 அடி நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதன் மூலம் அருகே உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இது குறித்து ஊர் பொதுமக்களிடம் கேட்ட போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊரணியை கிராம மக்கள் தூர்வாரினர். இதனால் வறட்சியான காலங்களிலும் இந்த ஊரணியில் நீர் இருப்பதாகவும் இதன் மூலம்,இதனை சுற்றியுள்ள மக்கள் பயன்பெறுவதாகவும் கூறுகின்றார்கள். அனைவரும் இதை பின்பற்றி ஏரி,குளம், கண்காய்களை முறையாக தூர்வாரினால் வருங்காலத்தில் ஏற்படு தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

பேட்டி. காயத்திரி அழகன்குளம்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.