ETV Bharat / state

தீவிரவாத தாக்குதல் - பாதுகாப்பு ஒத்திகை

author img

By

Published : Aug 7, 2021, 9:30 PM IST

Updated : Aug 7, 2021, 9:35 PM IST

ராமேஸ்வரம் கோயிலில் தீவிரவாத தாக்குதலை தடுப்பது குறித்து தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தீவிரவாத தாக்குதலை தடுப்பது குறித்து ஒத்திகை
தீவிரவாத தாக்குதலை தடுப்பது குறித்து ஒத்திகை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் தீவிரவாதிகள் கோயிலுக்குள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு பிடிப்பது என்பது தொடர்பாக ஒத்திகை இன்று (ஆக.07) நடைபெற்றது. இதற்காக டம்மி கண்ணீர் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாதுகாப்பு ஒத்திகையில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஒத்திகை

மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் மக்களை பாதுகாப்பு படையினர் தீவிரவாதி போல் துப்பாக்கி முனையில் பணயக் கைதியாக பிடித்து கோயிலுக்குள் அழைத்து செல்கிறார். அவரை பிடிக்க கண்ணீர்ப்புகை வெடிகுண்டை வெடிக்க வைத்து புகை மண்டலமாக மாற்றி பணயக் கைதியை தப்பிக்க வைப்பது போன்று ஒத்திகை நடைபெற்றது.

ராமேஸ்வரம் கோயிலில் தீவிரவாத தாக்குதலை தடுப்பது குறித்து ஒத்திகை

காவல்துறை பாதுகாப்பு

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பலத்த சத்தத்துடன் கூடிய வெடி பொருள் பயன்படுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக கோயில் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தனியார் ஒப்பந்தாரரை கண்டித்து சாலை மறியல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் தீவிரவாதிகள் கோயிலுக்குள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு பிடிப்பது என்பது தொடர்பாக ஒத்திகை இன்று (ஆக.07) நடைபெற்றது. இதற்காக டம்மி கண்ணீர் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாதுகாப்பு ஒத்திகையில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஒத்திகை

மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் மக்களை பாதுகாப்பு படையினர் தீவிரவாதி போல் துப்பாக்கி முனையில் பணயக் கைதியாக பிடித்து கோயிலுக்குள் அழைத்து செல்கிறார். அவரை பிடிக்க கண்ணீர்ப்புகை வெடிகுண்டை வெடிக்க வைத்து புகை மண்டலமாக மாற்றி பணயக் கைதியை தப்பிக்க வைப்பது போன்று ஒத்திகை நடைபெற்றது.

ராமேஸ்வரம் கோயிலில் தீவிரவாத தாக்குதலை தடுப்பது குறித்து ஒத்திகை

காவல்துறை பாதுகாப்பு

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பலத்த சத்தத்துடன் கூடிய வெடி பொருள் பயன்படுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக கோயில் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தனியார் ஒப்பந்தாரரை கண்டித்து சாலை மறியல்

Last Updated : Aug 7, 2021, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.