ETV Bharat / state

குக்கரில் சாராயம்: ஒருவர் கைது! - காவல்துறையினர் சோதனை

ராமநாதபுரம்: குக்கரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது!
குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது!
author img

By

Published : Apr 20, 2020, 10:02 AM IST

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக, மளிகைக் கடை, காய்கறி கடைகள், மருந்தகங்கள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறிவரும் குடி பிரியர்கள் சமூக வலைதளங்களில் உள்ள செய்முறை வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்ச தொடங்கினர். இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது காவல் துறையினருக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருவதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படைடியில் உச்சிப்புளி சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (37), என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவர் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதனையடுத்து கருணாகரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

குக்கரில் சாராயம் காய்ச்சியவர்
குக்கரில் சாராயம் காய்ச்சியவர்

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூரில் கள்ளச்சாரம் காய்ச்சிய தாய் விமலா, மகன்கள் கிளிண்டன், நெசக்குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 25லிட்டர் கள்ளச் சாராயத்தை பரிமுதல் செய்தனர்.

ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடி இருப்பதால கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

இதையும் பார்க்க: சினிமா பாணியில் போலீஸ் ஆக்‌ஷன்; மதுபாட்டில்களுடன் தப்ப முயன்ற கார் பறிமுதல்!

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக, மளிகைக் கடை, காய்கறி கடைகள், மருந்தகங்கள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறிவரும் குடி பிரியர்கள் சமூக வலைதளங்களில் உள்ள செய்முறை வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்ச தொடங்கினர். இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது காவல் துறையினருக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருவதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படைடியில் உச்சிப்புளி சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (37), என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவர் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதனையடுத்து கருணாகரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

குக்கரில் சாராயம் காய்ச்சியவர்
குக்கரில் சாராயம் காய்ச்சியவர்

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூரில் கள்ளச்சாரம் காய்ச்சிய தாய் விமலா, மகன்கள் கிளிண்டன், நெசக்குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 25லிட்டர் கள்ளச் சாராயத்தை பரிமுதல் செய்தனர்.

ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடி இருப்பதால கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

இதையும் பார்க்க: சினிமா பாணியில் போலீஸ் ஆக்‌ஷன்; மதுபாட்டில்களுடன் தப்ப முயன்ற கார் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.