ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

author img

By

Published : Jul 28, 2021, 6:38 AM IST

ராமநாதபுரத்தில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்தவர் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா விற்பனை செய்தவர் கைது
கஞ்சா விற்பனை செய்தவர் கைது

ராமநாதபுரம்: கீழக்கரையைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (45). இவர் மீது கீழக்கரை, தனுஷ்கோடி, பரமக்குடி நகர் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கஞ்ச கடத்தல் வழக்கு மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், சாகுல் ஹமீதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு பரிந்துரை செய்தார்.

இதனடிப்படையில் பரமக்குடி டவுன் காவல்துறையினர் சாகுல் ஹமீதுவை கைது செய்து மதுரை மத்திய சிறையில் நேற்று (ஜூலை 27) அடைத்தனர்.

ஜனவரி மாதம் 80 கிலோ கஞ்சாவை காரில் கடத்தியதாக சாகுல் ஹமீது மீது பரமக்குடி நகர் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

இதையும் படிங்க: காதலி வீடு புகுந்து காதலன் தாக்குதல் - ஷாக்கிங் சிசிடிவி காட்சி

ராமநாதபுரம்: கீழக்கரையைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (45). இவர் மீது கீழக்கரை, தனுஷ்கோடி, பரமக்குடி நகர் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கஞ்ச கடத்தல் வழக்கு மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், சாகுல் ஹமீதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு பரிந்துரை செய்தார்.

இதனடிப்படையில் பரமக்குடி டவுன் காவல்துறையினர் சாகுல் ஹமீதுவை கைது செய்து மதுரை மத்திய சிறையில் நேற்று (ஜூலை 27) அடைத்தனர்.

ஜனவரி மாதம் 80 கிலோ கஞ்சாவை காரில் கடத்தியதாக சாகுல் ஹமீது மீது பரமக்குடி நகர் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

இதையும் படிங்க: காதலி வீடு புகுந்து காதலன் தாக்குதல் - ஷாக்கிங் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.