இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 40 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்றனர். பின்னர் கரை திரும்பிய அவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்தாலும் இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
இதனால் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து கரை திரும்புகின்றனர்.
இதையும் படிங்க: தற்காலிகமாக போராட்டத்தை திரும்பப் பெற்ற சாமந்தான்பேட்டை மீனவர்கள்