ETV Bharat / state

ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

author img

By

Published : Sep 24, 2019, 11:59 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 32லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடல்அட்டைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மண்டபம் காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் தலைமைக் காவலர்கள் பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

கடல் அட்டைகளை கடத்தி வந்த வாகனம்

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.32லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வேனில் இருந்த இருவரை கைது செய்து விசாரித்ததில், இருவரும் ராமேஸ்வரம் எம்ஆர்டி நகரைச் சேர்ந்த லிங்கநாதன் மற்றும் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: 200 கிலோ கடல் அட்டையை பிடித்த 11 பேர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடல்அட்டைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மண்டபம் காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் தலைமைக் காவலர்கள் பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

கடல் அட்டைகளை கடத்தி வந்த வாகனம்

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.32லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வேனில் இருந்த இருவரை கைது செய்து விசாரித்ததில், இருவரும் ராமேஸ்வரம் எம்ஆர்டி நகரைச் சேர்ந்த லிங்கநாதன் மற்றும் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: 200 கிலோ கடல் அட்டையை பிடித்த 11 பேர் கைது!!

Intro:இராமநாதபுரம்
செப்.24

இலங்கை கடத்த முயன்ற 32 லட்சம் மதிப்புள்ளத் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பதப்படுத்தப்பட்ட நிலையில் 400 கிலோ பறிமுதல், இருவர் கைது.Body:இராமநாதபுரம் மாவட்டம்
மண்டபத்தில் இருந்து இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக போலீசார்க்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மண்டபம் காவல்நிலைய ஆய்வாளர் கனகராஜ் உத்தரவின் பேரில் தலைமை காவலர் யாசுதீன் பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆமினி வேனை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பதப்படுத்தப்பட்ட நிலையல் 400 கிலோ சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
அதில் வந்த இருவரை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் இராமேஸ்வரம் எம் ஆர் டி நகரைச் சேர்ந்த
லிங்கநாதன் ,
, சத்திய மூர்த்தி என்பது தெரியவந்தது.
கடல் அட்டைகளை இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டை வனத்துறையின் ஒப்படைக்கப்படும்.

மண்டபம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் 200 கிலோ கடல் அட்டை உயிருடன் பிடிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது. கடல் அட்டையை பிடித்த 11 பேரை கைதும் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.