இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை சுழன்றடித்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிப்புகள் நீங்க வேண்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பாஜகவினர் 28 இடங்களில் சிறப்பு யாகம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு யாகம் செய்த பிரசாதத்தையும் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணத்திற்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்