ETV Bharat / state

குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை

author img

By

Published : Aug 14, 2020, 3:00 PM IST

புதுக்கோட்டை: திருமயம் கல்குவாரி அருகே குளிக்கச்சென்ற 24 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youngster died bathing in quarrying of stone
youngster died bathing in quarrying of stone

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே ஓடையப்பட்டியில் கல்குவாரிகள் உள்ளன. இதில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்ப்பவர் சுப்பிரமணியன் (24). இவரது சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பொம்முடி ஆகும். சுப்பிரமணியன் இப்பகுதியில் தங்கி பணி செய்து வந்தார். காலை பணி முடிந்த பின் சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள நீர்நிலைக்கு குளிக்கச் சென்றுள்ளார். போனவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது நண்பர்கள் தேடியுள்ளனர். அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார்.

இது பற்றி திருமயம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த உதவி காவல் ஆய்வாளர் ஸ்டாலின், காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே ஓடையப்பட்டியில் கல்குவாரிகள் உள்ளன. இதில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்ப்பவர் சுப்பிரமணியன் (24). இவரது சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பொம்முடி ஆகும். சுப்பிரமணியன் இப்பகுதியில் தங்கி பணி செய்து வந்தார். காலை பணி முடிந்த பின் சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள நீர்நிலைக்கு குளிக்கச் சென்றுள்ளார். போனவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது நண்பர்கள் தேடியுள்ளனர். அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார்.

இது பற்றி திருமயம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த உதவி காவல் ஆய்வாளர் ஸ்டாலின், காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.