ETV Bharat / state

மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - மணற்கொள்ளை

புதுக்கோட்டை: அக்கினி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madras high court madurai bench
author img

By

Published : Jul 23, 2019, 11:26 AM IST

Updated : Jul 23, 2019, 1:31 PM IST

புதுக்கோட்டை கறம்பக்குடி தாலுகாவைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

high, Court, madurai, bench, pudhukottai, Agni, river  The loot of sand  மணல் திருட்டு கறம்பக்குடி  மணற்கொள்ளை  sand theft in Karambakkudi
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

அம்மனுவில் "கறம்பக்குடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. கறம்பக்குடி மற்றும் அதன் அருகே உள்ள மணிவாயில் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆறுகளால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கும்.

தற்போது அப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள அக்னி ஆற்றில் ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி 30 அடிக்கும் மேல் தோண்டப்பட்டு 20-க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடப்பட்டுவருகிறது.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் திருட்டினால் கறம்பக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கறம்பக்குடி பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க உத்தரவிட வேண்டும்"என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

புதுக்கோட்டை கறம்பக்குடி தாலுகாவைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

high, Court, madurai, bench, pudhukottai, Agni, river  The loot of sand  மணல் திருட்டு கறம்பக்குடி  மணற்கொள்ளை  sand theft in Karambakkudi
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

அம்மனுவில் "கறம்பக்குடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. கறம்பக்குடி மற்றும் அதன் அருகே உள்ள மணிவாயில் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆறுகளால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கும்.

தற்போது அப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள அக்னி ஆற்றில் ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி 30 அடிக்கும் மேல் தோண்டப்பட்டு 20-க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடப்பட்டுவருகிறது.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் திருட்டினால் கறம்பக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கறம்பக்குடி பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க உத்தரவிட வேண்டும்"என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Intro:புதுக்கோட்டை அக்னி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை அக்னி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:புதுக்கோட்டை அக்னி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை அக்னி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த வைத்தியநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கறம்பக்குடி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கறம்பக்குடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மணியவாயில் கிராமம் அமைந்துள்ளது. அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆறுகள் சூழ தீவு போல் காணப்படும். தற்போது, அந்த பகுதியில் அமைந்துள்ள அக்னி ஆற்றில் ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, 30 அடிக்கும் மேல் தோண்டப்பட்டு மணல் திருட்டு நடைபெறுகின்றது.

ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் எடுத்து சென்று விற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், மட்டுமில்லாது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த மணல் திருட்டினால் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களிலும் நீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. விவசாயமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கறம்பக்குடி பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு இதனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.Conclusion:
Last Updated : Jul 23, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.