ETV Bharat / state

முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டை : ஆலங்குடி அருகேயுள்ள சம்பட்டிவிடுதி ஊராட்சியில் மூன்று மாதமாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Jun 25, 2019, 7:24 PM IST

water

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி ஊராட்சியில் சுமார் மூவாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு நான்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குழாய் மூலம் குடிநீர் வழங்கி வந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலமாக சேரும் சகதியுமாக மாசுபடிந்த குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இன்று காலை புதுக்கோட்டை கறம்பக்குடி சாலை சம்பட்டிவிடுதி தபால் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆலங்குடி, சம்பட்டிவிடுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, காவல் துறையினர் மேற்கொள்ள முயன்ற சமரச பேச்சுவார்த்தையை, பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.

தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி ஊராட்சியில் சுமார் மூவாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு நான்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குழாய் மூலம் குடிநீர் வழங்கி வந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலமாக சேரும் சகதியுமாக மாசுபடிந்த குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இன்று காலை புதுக்கோட்டை கறம்பக்குடி சாலை சம்பட்டிவிடுதி தபால் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆலங்குடி, சம்பட்டிவிடுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, காவல் துறையினர் மேற்கொள்ள முயன்ற சமரச பேச்சுவார்த்தையை, பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.

தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:Body:முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்.



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சம்பட்டிவிடுதி ஊராட்சி யில் மூன்று மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங் கங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சம்பட்டிவிடுதி ஊராட்சியில் சுமார் மூவாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு நான்கு ஆழ் குழாய் கிணறுகளை அமைத்து மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி குழாய் மூலம் குடிநீர் வழங்கி வந்தது

கடந்த மூன்று மாத காலமாக குடிநீருக்குப் பதி லாக சேரும் சகதியுமாக வந்துள்ளது.இது தொட ர்பாக பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறைவு புகார் செய்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

குடிநீருக்காக அவஸ்தைப்பட்டனர். பொதுமக்கள் ஒன்று கூடி இன்று காலை புதுக்கோட்டை கறம் பக்குடி சாலை சம்பட்டிவிகுதி போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்ட னர்.
தகவலறிந்த ஆலங்குடி மற்றும் சம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போ லீசாரின் சமரச பேச்சுவார்த்தையை பொதுமக் கள் ஏற்க மறுத்தனர்.

தகவலறிந்த புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரவேலன் பொது மக்களுடன் பே ச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க ஆழ்குழாய் கிணறுக ளை உடனடியாக தூர்வார ஏற்பாடு செய்தனர்.

நல்ல தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் புதுக் கோட்டை கறம்பக்குடி சாலையில் ஏறாத்தாழ இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.