ETV Bharat / state

'நோட்டாவிற்கு ஓட்டு போடுங்கள்...!'

author img

By

Published : Mar 27, 2019, 11:25 PM IST

புதுக்கோட்டை: தொகுதியை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்டம் முழுவதும் அகில இந்திய சமூக நல காந்தி பேரவை சார்பில் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரை நடைபெற்றுவருகிறது.

தினகரன்

இது தொடர்பாக காந்தி பேரவையில் புதுக்கோட்டை மாவட்ட நிறுவனர் தினகரன் கூறியதாவது;

புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால், அரசியல் விஷமிகளின் செயலால் புதுக்கோட்டை தொகுதி பறிபோயிருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்கு உட்பட்டதாகும்.

எங்கள் மாவட்டம் தனக்கென்று தனி நாடாளுமன்றஉறுப்பினர் இல்லாமல் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. புதுக்கோட்டை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டுமென்றால் ராமநாதபுரம், கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டுமா? இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கூட நாடாளுமன்ற உறுப்பினர் வந்து எட்டிப் பார்க்கவில்லை.

எனவே, அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்காமல் இருந்தால்தானே குற்றம். அதையே 49ஓ பிரிவின்படி நோட்டாவிற்கு வாக்களித்தால் தவறல்ல. இவர்களுக்கு வாக்களித்து எவ்வித நலன்களையும் பெறாமல் இருப்பதைவிட நோட்டாவுக்கு வாக்களித்து இந்தியாவையே புதுக்கோட்டை மாவட்ட பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்; அப்பொழுதுதான் அரசியல்வாதிகளுக்கு புத்திவரும்.

அரசியல் கட்சிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பதால்என்ன பயன் என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பதால் மட்டும் என்ன பயன் இருக்கப்போகிறது? இப்போது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தவித பயனும் இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். அதுவரை நோட்டாவிற்கு நாங்கள் பரப்புரைசெய்துகொண்டே இருப்போம் எதற்கும் பிடி கொடுக்கப் போவதில்லை.

உறவுகளை விட உரிமை முக்கியம்; கட்சிகளை விட உரிமை முக்கியம் இதுதான் எனது நோக்கம். இவ்வாறுஎன்று தினகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக காந்தி பேரவையில் புதுக்கோட்டை மாவட்ட நிறுவனர் தினகரன் கூறியதாவது;

புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால், அரசியல் விஷமிகளின் செயலால் புதுக்கோட்டை தொகுதி பறிபோயிருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்கு உட்பட்டதாகும்.

எங்கள் மாவட்டம் தனக்கென்று தனி நாடாளுமன்றஉறுப்பினர் இல்லாமல் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. புதுக்கோட்டை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டுமென்றால் ராமநாதபுரம், கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டுமா? இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கூட நாடாளுமன்ற உறுப்பினர் வந்து எட்டிப் பார்க்கவில்லை.

எனவே, அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்காமல் இருந்தால்தானே குற்றம். அதையே 49ஓ பிரிவின்படி நோட்டாவிற்கு வாக்களித்தால் தவறல்ல. இவர்களுக்கு வாக்களித்து எவ்வித நலன்களையும் பெறாமல் இருப்பதைவிட நோட்டாவுக்கு வாக்களித்து இந்தியாவையே புதுக்கோட்டை மாவட்ட பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்; அப்பொழுதுதான் அரசியல்வாதிகளுக்கு புத்திவரும்.

அரசியல் கட்சிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பதால்என்ன பயன் என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பதால் மட்டும் என்ன பயன் இருக்கப்போகிறது? இப்போது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தவித பயனும் இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். அதுவரை நோட்டாவிற்கு நாங்கள் பரப்புரைசெய்துகொண்டே இருப்போம் எதற்கும் பிடி கொடுக்கப் போவதில்லை.

உறவுகளை விட உரிமை முக்கியம்; கட்சிகளை விட உரிமை முக்கியம் இதுதான் எனது நோக்கம். இவ்வாறுஎன்று தினகரன் தெரிவித்தார்.

Intro:அனைவரும் தயவு செய்து நோட்டாவிற்கு ஓட்டு போடுங்கள்..
பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் பெரியவர்..


புதுக்கோட்டை தொகுதியை மீட்க வேண்டும் என கோரி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அகில இந்திய சமூக நல காந்தி பேரவை சார்பில் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது...


Body:இது தொடர்பாக காந்தி பேரவையில் புதுக்கோட்டை மாவட்ட நிறுவனர் தினகரன் அவர்களிடம் கேட்டபோது,...

வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டங்கள் நல்ல முறையில் தொகுதிகளை கொண்டு செயல்பட்டு வந்தது ஆனால் அரசியல் விஷமிகளின் செயலால் தற்போது தொகுதி பறிபோயிருக்கிறது இது மிகப்பெரிய கண்டனத்திற்கு உட்பட்டது. விராலிமலை அறந்தாங்கி கந்தர்வகோட்டை திருமயம் ஆலங்குடி ஆகிய தொகுதிகள் வேறு மாவட்டங்களுக்கு பாராளுமன்ற தொகுதிகளாக பிரித்து வைத்து விட்டனர் இதனால் எங்கள் மாவட்டம் தனக்கென்று தனி பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. புதுக்கோட்டை மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டுமென்றால் ராமநாதபுரம் கரூர் திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டுமா? கடந்த முறை வாக்களித்தார்கள் ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இதுவரை புதுக்கோட்டை பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என இயற்கை பேரிடர் சமயத்தில் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. அரசியலமைப்பு சட்டப்படி ஓட்டுப் போடாமல் இருந்தால் தானே குற்றம் அதையே 49ஓ பிரிவின்படி நோட்டாவிற்கு ஓட்டு போட்டால் தவறல்ல. இவர்களுக்கு வாக்களித்து எவ்வித நலன்களையும் பெறாமல் இருப்பதைவிட நோட்டாவுக்கு வாக்களித்து இந்தியாவையே புதுக்கோட்டை மாவட்ட பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும். 2009இல் தேர்தல் வந்த பொழுது அவருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தோம் அதற்கேற்றார்போல 13,600 வாக்குகளும் 2014 தேர்தலில் நோட்டாவிற்கு 50 ஆயிரத்து தொள்ளாயிரத்து 32 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன அரை லட்சம் ஓட்டுகள் நோட்டாவிற்கு மட்டுமே கிடைத்தது ஆனால் அதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை அதனால் பாராளுமன்ற தொகுதி மட்டுமில்லாமல் இன்று எங்கள் மாவட்ட அந்தஸ்து பறிபோகும் நிலையில் உள்ளது.
அரசியல் கட்சிகள் நோட்டாவிற்கு போடுவதால் என்ன பயன் என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பதால் மட்டும் என்ன பயன் இருக்கப் போகிறது? இப்போது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த வித பயனும் இல்லை கடந்த முறை ஆயிரத்திற்கும் மேல் மக்கள் நோட்டாவிற்கு வாக்களித்தனர் தற்போது இருக்கும் நிலைமையை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக லட்சத்திற்கு மேல் நோட்டாவிற்கு வாக்களிப்பார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஒரு முதன்மையான மாவட்டம் கண்டிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் அதுவரை நோட்டாவிற்கு நாங்கள் பிரச்சாரம் செய்து கொண்டே இருப்போம் இதற்கென பல எதிர்ப்புகள் எனக்கு இருக்கிறது அரசியல் கட்சியினர் என்னிடம் சமாதானம் பேசுகிறார்கள் ஆனால் எதற்கும் பிடி கொடுக்கப் போவதில்லை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என தொகுதி ஒதுக்க வேண்டும். ஏனென்றால் உறவுகளை விட உரிமை முக்கியம் கட்சிகளை விட உரிமை முக்கியம் இதுதான் எனது நோக்கம் என்று தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.