ETV Bharat / state

இலங்கை கடற்படையினர் அடாவடி: புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேர் கைது

author img

By

Published : Nov 4, 2019, 8:52 AM IST

புதுக்கோட்டை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாகப் புதுக்கோட்டை மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

fishermen arrested

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து ஆரோக்கியராஜ், முருகன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைப்படகில் அவர்கள் உள்பட ராஜ்குமார், மோகன், நாகராஜ், மைக்கில், தினேஷ், சாரதி, அரவிந்த், சிவகுமார் உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், மருத்துவ பரிசோதனை செய்து மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன், மீனவர்களை வரும் 13ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:

100 மீனவர்களின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - வசந்தகுமார் எம்.பி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து ஆரோக்கியராஜ், முருகன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைப்படகில் அவர்கள் உள்பட ராஜ்குமார், மோகன், நாகராஜ், மைக்கில், தினேஷ், சாரதி, அரவிந்த், சிவகுமார் உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், மருத்துவ பரிசோதனை செய்து மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன், மீனவர்களை வரும் 13ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:

100 மீனவர்களின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - வசந்தகுமார் எம்.பி

Intro:Body:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் பத்து பேருக்கு சிறை

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாபட்டிணம் இருந்து ஆரோக்கியராஜ்,முருகன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைபடகில் ராஜ்குமார்,மோகன்,நாகராஜ், மைக்கில்,தினேஷ்,சாரதி,அரவிந்த்,சிவகுமார் உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்து பத்து மீனவர்களையும் அவர்களது இரண்டு படகையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு பின் மீனவர்களை யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பின்ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் மீனவர்களை வரும் 13ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள். அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.