புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடியைச் சேர்ந்தவர் கருப்பையா(65). இவர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் எம்ஜிஆர் சிலை அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த தனியார் நிறுவன விளம்பர பலகையின் குழாயின் மீது கை வைத்துள்ளார்.
எதிர்பார விதமாக அந்த குழாயில் எற்பட்ட மின் கசிவினால் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அறந்தாங்கி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை தாக்கிய மின்சாரம் - காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழந்த சோகம்!