ETV Bharat / state

மோடி உருவ பொம்மை எரிக்க முயற்சி: கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

author img

By

Published : Dec 5, 2020, 7:22 PM IST

புதுக்கோட்டை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் அனைத்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

உடனே காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் அனைத்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

உடனே காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.