ETV Bharat / state

கிணற்றில் தவறிவிழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்! - புதுக்கோட்டை செய்திகள்

புதுக்கோட்டை: இலுப்பூரில், கிணற்றில் தவறிவிழுந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

woman fell down in Well saved by firefighters at Illupur
author img

By

Published : Oct 21, 2019, 8:25 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (60) நேற்று, கண்ணாரத்தெருவைச் சேர்ந்த பள்ளிவாசலின் கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில். தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிருக்குப் போராடிவந்த வள்ளியம்மாளை கயிறுகட்டி மீட்டு கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தனர்.

தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தால் இலுப்பூர் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (60) நேற்று, கண்ணாரத்தெருவைச் சேர்ந்த பள்ளிவாசலின் கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில். தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிருக்குப் போராடிவந்த வள்ளியம்மாளை கயிறுகட்டி மீட்டு கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தனர்.

தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தால் இலுப்பூர் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

பசுவின் வயிற்றில் 52 கிலோ நெகிழி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

இலுப்பூரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது-60) இவர் நேற்று இலுப்பூர் கண்ணாரத்தெருவில் உள்ள பள்ளிவாசல் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் (பொருப்பு) மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புதுறை வீரர்கள் போராடி கயிர் மூலம் கட்டி வள்ளியம்மாளை உயிருடன் மீட்டு மேலே கொண்டுவந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.