ETV Bharat / state

வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய ஊராட்சி ஒன்றியத் தலைவர்

author img

By

Published : Apr 2, 2020, 7:08 PM IST

பெரம்பலூர் : ஊராட்சி ஒன்றியம் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றியம் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
ஊராட்சி ஒன்றியம் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசும், பொதுமக்களும் தாங்களாகவே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றியம் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள கோனேரி பாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுரக் குடிநீரை ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்தாதேவி குமார் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதனையும் எடுத்து கூறினார். இந்த கபசுரக் குடிநீரை பொதுமக்கள் பலர் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசும், பொதுமக்களும் தாங்களாகவே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றியம் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள கோனேரி பாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுரக் குடிநீரை ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்தாதேவி குமார் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதனையும் எடுத்து கூறினார். இந்த கபசுரக் குடிநீரை பொதுமக்கள் பலர் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.