ETV Bharat / state

உச்சநீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!

author img

By

Published : Jul 29, 2023, 6:31 PM IST

Updated : Jul 29, 2023, 6:41 PM IST

உச்சநீதிமன்ற நீதிபதை விமர்சனம் செய்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை கைது செய்த பெரம்பலூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

பத்ரி சேஷாத்ரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காடூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்த புகாரில் “நான் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறேன். நான் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பத்ரி சேஷாத்ரி உரையாடியதை பார்த்தேன். அந்த உரையாடலில் ’உங்களால் ஏதும் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கிச் செய்கிறோம்.

நாம் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கையில் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம். அங்கு அமைதியைக் கொண்டு வர முடியுமா?. அது மலைப்பாங்கான பகுதி. அங்கு கொலை நடக்கத்தான் செய்யும்’ எனக் கூறுகிறார். இந்த பேச்சு இரு தரப்பு மக்களிடையே அமைதியைக் குலைக்கும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், மேலும் உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசினார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவரது புகார் தொடர்பாகக் குன்னம் போலீசார் பத்ரி சேஷாத்ரி மீது 153,153A,505(1)(b) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் சென்னையில் பத்ரி சேஷாத்திரியைக் கைது செய்தனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்த போலீசார் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்ரி சேஷாத்ரி குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, பத்ரி சேஷாத்ரியை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்கு
வந்திருந்த பாஜக நிர்வாகிகள் பத்ரி சேஷாத்திரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ‘புகழ் பெற்ற பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதைத் தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்

இதையும் படிங்க: உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது - அண்ணாமலை கண்டனம்!

பத்ரி சேஷாத்ரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காடூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்த புகாரில் “நான் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறேன். நான் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பத்ரி சேஷாத்ரி உரையாடியதை பார்த்தேன். அந்த உரையாடலில் ’உங்களால் ஏதும் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கிச் செய்கிறோம்.

நாம் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கையில் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம். அங்கு அமைதியைக் கொண்டு வர முடியுமா?. அது மலைப்பாங்கான பகுதி. அங்கு கொலை நடக்கத்தான் செய்யும்’ எனக் கூறுகிறார். இந்த பேச்சு இரு தரப்பு மக்களிடையே அமைதியைக் குலைக்கும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், மேலும் உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசினார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவரது புகார் தொடர்பாகக் குன்னம் போலீசார் பத்ரி சேஷாத்ரி மீது 153,153A,505(1)(b) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் சென்னையில் பத்ரி சேஷாத்திரியைக் கைது செய்தனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்த போலீசார் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்ரி சேஷாத்ரி குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, பத்ரி சேஷாத்ரியை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்கு
வந்திருந்த பாஜக நிர்வாகிகள் பத்ரி சேஷாத்திரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ‘புகழ் பெற்ற பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதைத் தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்

இதையும் படிங்க: உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது - அண்ணாமலை கண்டனம்!

Last Updated : Jul 29, 2023, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.