பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் கடந்து ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் முட்புதர்களால் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனிடையே இந்தச் சுகாதார வளாகத்திற்கு 2018 -19ஆம் ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி செலவிடப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தக் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'திறந்தவெளி மலக்கழிவு இல்லாத கிராமம்' என்ற ஒரு அறிவிப்பு பலகையினையும் வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சமூக செயற்பாட்டாளர்கள் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படியுங்க: