ETV Bharat / state

தங்கம் வென்ற மாணவியை பாராட்டிய ரஜினி ரசிகர்மன்றம்

பெரம்பலூர்: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini fans club
author img

By

Published : May 13, 2019, 12:36 PM IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். சென்னையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு இலக்கியா என்ற பெண் உள்ளார்.

சிறுவயதிலேயே இலக்கியாவிற்கு கராத்தே விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதால், சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இலக்கியா பங்கேற்றார். இப்போட்டியில், இரண்டு பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இலக்கியா.

வெற்றி பெற்று நாடு திரும்பிய இலக்கியாவிற்கு சொந்த ஊரான பிலிமிசை கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலக்கியாவை பாராட்டி கவுரவித்துள்ளனர். மேலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கினர். இதில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். சென்னையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு இலக்கியா என்ற பெண் உள்ளார்.

சிறுவயதிலேயே இலக்கியாவிற்கு கராத்தே விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதால், சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இலக்கியா பங்கேற்றார். இப்போட்டியில், இரண்டு பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இலக்கியா.

வெற்றி பெற்று நாடு திரும்பிய இலக்கியாவிற்கு சொந்த ஊரான பிலிமிசை கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலக்கியாவை பாராட்டி கவுரவித்துள்ளனர். மேலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கினர். இதில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Intro:மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தங்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா என்ற வீராங்கனைக்கு பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பாராட்டு


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இலக்கியா என்ற ஒரு மகள் உள்ளார் இலக்கியா விற்கு சிறுவயதிலேயே கராத்தே போட்டியில் மேல் ஆர்வம் இந்த காரணத்தினால் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றார் மாநில மாவட்ட அளவில் வெற்றி வாகை சூடினார் இதனிடையே கடந்த வாரம் மலேசியாவில் சர்வதேச அளவிலான 12 வயது இருக்கும் கராத்தே போட்டியில் இலக்கியா பங்குபெற்று இரண்டு பிரிவுகளில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார் இதனிடையே நேற்று தங்கம் என்ற இலக்கியத்திற்கு சொந்த ஊரான பிலிமிசை கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர் இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தங்க மகள் இலக்கியா வீட்டிற்குச் சென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இலக்கியாவை பாராட்டி பொன்னாடை போர்த்தி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு ரூபாய் 5,000 நிதி உதவியை வழங்கி பாராட்டி கௌரவித்தனர்


Conclusion:ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.