பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் புதிய பயணம் அமைப்பு சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான ஒவியப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 150 கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நெகிழியின் பிரச்னைகளும்-தீர்வுகளும், நீரின்றி அமையாது உலகு, இயற்கை வேளாண்மையும், நோயில்லா வாழ்வும் என்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் ஒவியங்களை படைத்தனர்.
இந்த ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதிய பயணம் அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் பங்கேற்ற ஒவியப்போட்டி இதையும் படிங்க: தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டுப் போட்டி தொடக்கம்