பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மனைவியும் ஸ்வேதா, நிவேதா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதனிடையே குடும்ப செலவிற்காக தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் 2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்யை வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.
இவற்றில் பாதி ரூபாயை திருப்பி செலுத்திய பின்னரும், சந்திரா பொய்யான கணக்குகளை கூறி மேலும் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டுமென கூலி ஆட்களை வைத்து மிரட்டியுள்ளார்.
இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ராமச்சந்திரன் செல்லப்பாண்டி தம்பதியினர் கந்துவட்டி கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.