பெரம்பலூர் மாவட்டம் எத்தனை கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. செல்லம்மாளின் கணவர் இறந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில், விவசாய கூலி வேலை செய்துவரும் செல்லம்மாள் வீடு, நிலங்களை அவரது மகன் செல்வராஜ் அபகரித்துள்ளார்.
![old women](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-03-old-women-petition-script-vis-tn10037_25012021154538_2501f_01782_978.jpg)
இதனையடுத்து தன் மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் செல்லம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை அப்புறப்படுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு செல்லம்மாள் வீடு திரும்பினார்.