ETV Bharat / state

மகனிடமிருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி மூதாட்டி மனு!

author img

By

Published : Jan 25, 2021, 6:31 PM IST

பெரம்பலூர்: மகனிடமிருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் 70 வயது மூதாட்டி ஒருவர் வந்திருந்தார்.

old women
old women

பெரம்பலூர் மாவட்டம் எத்தனை கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. செல்லம்மாளின் கணவர் இறந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில், விவசாய கூலி வேலை செய்துவரும் செல்லம்மாள் வீடு, நிலங்களை அவரது மகன் செல்வராஜ் அபகரித்துள்ளார்.

old women
மூதாட்டி கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேன்

இதனையடுத்து தன் மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் செல்லம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை அப்புறப்படுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு செல்லம்மாள் வீடு திரும்பினார்.

பெரம்பலூர் மாவட்டம் எத்தனை கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. செல்லம்மாளின் கணவர் இறந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில், விவசாய கூலி வேலை செய்துவரும் செல்லம்மாள் வீடு, நிலங்களை அவரது மகன் செல்வராஜ் அபகரித்துள்ளார்.

old women
மூதாட்டி கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேன்

இதனையடுத்து தன் மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் செல்லம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை அப்புறப்படுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு செல்லம்மாள் வீடு திரும்பினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.