ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி கொள்ளை: மாஸ்டர் பிளான் முருகனிடம் காவல் துறை விசாரணை

author img

By

Published : Oct 12, 2019, 2:51 PM IST

Updated : Oct 12, 2019, 4:18 PM IST

திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளியான முருகனிடம், பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

murugan arrest

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து திருச்சி காவல் துறை ஏழு தனிப்படை அமைத்து கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த மற்றொரு தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவர் திருவண்ணாமலையில் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தார். இதனிடையே, லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூருவில் தலைமறைவாக இருந்து வந்தார். முருகன் தலைமறைவாக இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படை காவல் துறையினர் பெங்களூரு விரைந்து முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று முருகன் சரணடைந்தார். லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜரான முருகனிடம் பெங்களூரு கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், பெங்களூருவில் கொள்ளையடித்த தங்கத்தை பெரம்பலூரில் உள்ள நபரிடம் கொடுத்து வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கர்நாடக காவல் துறையினர் முருகனை பெரம்பலூர் அழைத்து வந்து தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் முருகனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து திருச்சி காவல் துறை ஏழு தனிப்படை அமைத்து கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த மற்றொரு தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவர் திருவண்ணாமலையில் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தார். இதனிடையே, லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூருவில் தலைமறைவாக இருந்து வந்தார். முருகன் தலைமறைவாக இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படை காவல் துறையினர் பெங்களூரு விரைந்து முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று முருகன் சரணடைந்தார். லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜரான முருகனிடம் பெங்களூரு கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், பெங்களூருவில் கொள்ளையடித்த தங்கத்தை பெரம்பலூரில் உள்ள நபரிடம் கொடுத்து வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கர்நாடக காவல் துறையினர் முருகனை பெரம்பலூர் அழைத்து வந்து தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் முருகனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளியான முருகன் நேற்று கர்நாடக நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் முருகனை வைத்து நகை கொள்ளை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது


Body:திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடைகள் கடந்த 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையர்கள் திருடி சென்றனர் இந்த வழக்கில் 7 தனிப்படை அமைத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் சுரேஷின் தாயார் கனகவல்லி உள்ளிட்ட 6 பேரை ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் நேற்று முன்தினம் காலை போலீசாரால் தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவன் திருவண்ணாமலையில் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தார் இதனிடையே இக்கொலை சம்பவத்திற்கு திட்டம் வகுத்து செயல்படுத்தி யதாக கருதப்படுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூர் சென்று தலைமறைவாக இருப்பது தெரியவந்ததை அடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் வரைந்தனர் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று முருகன் சரணடைந்தார் இதனையடுத்து லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜரான முருகனிடம் பெங்களூர் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பெங்களூரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடித்த தங்கத்தை பெரம்பலூரில் உள்ள நபரிடம் கொடுத்ததாக கூறி இதையடுத்து கர்நாடக போலீசார் அவரை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் வந்தனர் இதையடுத்து தனிப்படை போலீசார் 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முருகனுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் கிருஷ்ணாபுரம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் திருச்சி மாநகர துணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது


Conclusion:இச்சம்பவம் பெரம்பலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Last Updated : Oct 12, 2019, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.