ETV Bharat / state

பெரம்பலூரில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 395ஆக உயர்ந்துள்ளது.

author img

By

Published : Jul 30, 2020, 11:12 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 30) 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான நான்கு ரோடு, துறைமங்கலம், அரணாரை, அடைக்கம்பட்டி, நெற்குப்பை, மின்நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 395ஆக உயர்ந்துள்ளது. அதில், 156 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 30) 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான நான்கு ரோடு, துறைமங்கலம், அரணாரை, அடைக்கம்பட்டி, நெற்குப்பை, மின்நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 395ஆக உயர்ந்துள்ளது. அதில், 156 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.