பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பொது கோரிக்கை மனுக்கள் குறித்தும் ஆய்வு செய்ய அரசின் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு இன்று நடைபெற்றது.
இக்குழுவின் ஆய்வுக் கூட்டம் குழுவின் தலைவரும் அரசின் தலைமை கொறாடாவுமான எஸ். ராஜேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் குழுவினர் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்தின், தமிழ்ச்செல்வன், தனியரசு, சக்கரபாணி, முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.