பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கின்ற 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை போவதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !