நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரயில் தண்டவாளத்தில் முதியவர் ஒருவரின் உடல் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து.
அந்தத் தகவலையடுத்து அங்கு விரைந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தீக்குளித்த வனத்துறை ஊழியர் உயிரிழப்பு!