ETV Bharat / state

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் - ஆடிப்பெருக்கு

நாமக்கல்: காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்
author img

By

Published : Aug 3, 2019, 9:16 PM IST

Updated : Aug 3, 2019, 9:58 PM IST

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஈரோடு பழையபாளையத்தைச் சேர்ந்த, திருமூர்த்தி (40) என்பவர் தன் மகன் கிருஷ்ணனுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை, மகன்

அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த தீயணைப்பு வீரர் மோகன் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்துவிட்டு, ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்று அவர்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதன்பின், விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மோகனுடன் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்
தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் முதலுதவி அளித்த பின் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஈரோடு பழையபாளையத்தைச் சேர்ந்த, திருமூர்த்தி (40) என்பவர் தன் மகன் கிருஷ்ணனுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை, மகன்

அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த தீயணைப்பு வீரர் மோகன் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்துவிட்டு, ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்று அவர்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதன்பின், விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மோகனுடன் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்
தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் முதலுதவி அளித்த பின் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர்.

Intro:உயிரை பணயம் வைத்து ஆற்றில் அடித்து சென்று கொண்டிருந்த தந்தை மகன் இருவரையும் உயிருடன்  மீட்ட திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்ததுBody:ஆடி 18 ம் நாள் திருவிழாவை கொண்டாட திருச்செங்கோட்டை அடுத்த பட்லூர் காவிரி ஆற்றுக்கு வந்து  குளித்துக்கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த தந்தை திருமூர்த்தி (40 ) மற்றும் மகன் கிருஷ்ணன் (9) ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டனர் இவர்களை திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்த தந்தை திருமூர்த்தி 40  மகன் கிருஷ்ணன் 9 இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் இருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்துவிட்டு ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்தி சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்து கொண்டிருந்தார். அதற்குள்  திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், கோவிந்தசாமி, துரைராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இறையமங்கலம் பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்லூர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்து வந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் ஆற்றில் இறங்கி  இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இருந்ததை கண்டு மற்ற வீரர்களும் ஆற்றில் நீந்தி தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் முதலுதவி செய்து   அவர்கள் வந்த தீயணைப்பு வாகனத்திலேயே இருவரையும் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவத்தைநேரில் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் உழைப்பையும் தியாகத்தையும் பாராட்டினார்கள்.Conclusion:
Last Updated : Aug 3, 2019, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.