ETV Bharat / state

ஆபாசமாக படம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கைகோரி பெற்றோர் போராட்டம்!

நாமக்கல்: பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறைக்குள் புகுந்து மாணவியை ஆபாசமாக படம் எடுத்த அடையாள தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Jun 10, 2019, 11:52 PM IST

கிருஷ்ணவேணி அரசினர்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கழிவறையில் மேல்கூரை இல்லாததால், சில சமூக விரோதிகள் கடந்த வியாழக்கிழமை மாணவி ஒருவரை ஆபாசமாக படம் எடுக்க முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த அந்த மாணவி அவர்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ந்து அவர்கள் படம் பிடித்ததால் அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியை தாக்கி சீருடையை கிழித்ததால், மாணவி அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்துள்ளார். இதை பார்த்த சக மாணவிகள், ஆசிரியருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மயக்கமடைந்த பத்தாம் வகுப்பு மாணவியை மீட்டு ஆசிரியர் அறையில் ஒய்வெடுக்க வைத்துள்ளனர்.

பெற்றோர் போராட்டம்
பெற்றோர் போராட்டம்

பின்பு மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி தகவல் கூறியுள்ளனர். பெற்றோர் பள்ளிக்கு வந்த பிறகு உங்கள் மகள் ஆடையில் அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு கோபமடைந்த பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதயைடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியரான சரஸ்வதி சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகார் அளித்துள்ளனர்.

மாணவியை ஆபாசமாக படம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை

இந்நிலையில் புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் சாந்த மூர்த்தி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து சிசிடிவி கேமராக்கள் வைத்து பள்ளியில் இருந்து மாணவிகள் வீடு திரும்பும் வரை உரிய பாதுகாப்பு தர காவல்துறை உறுதுணையாக இருக்கும் எனகூறியதை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கழிவறையில் மேல்கூரை இல்லாததால், சில சமூக விரோதிகள் கடந்த வியாழக்கிழமை மாணவி ஒருவரை ஆபாசமாக படம் எடுக்க முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த அந்த மாணவி அவர்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ந்து அவர்கள் படம் பிடித்ததால் அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியை தாக்கி சீருடையை கிழித்ததால், மாணவி அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்துள்ளார். இதை பார்த்த சக மாணவிகள், ஆசிரியருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மயக்கமடைந்த பத்தாம் வகுப்பு மாணவியை மீட்டு ஆசிரியர் அறையில் ஒய்வெடுக்க வைத்துள்ளனர்.

பெற்றோர் போராட்டம்
பெற்றோர் போராட்டம்

பின்பு மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி தகவல் கூறியுள்ளனர். பெற்றோர் பள்ளிக்கு வந்த பிறகு உங்கள் மகள் ஆடையில் அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு கோபமடைந்த பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதயைடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியரான சரஸ்வதி சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகார் அளித்துள்ளனர்.

மாணவியை ஆபாசமாக படம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை

இந்நிலையில் புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் சாந்த மூர்த்தி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து சிசிடிவி கேமராக்கள் வைத்து பள்ளியில் இருந்து மாணவிகள் வீடு திரும்பும் வரை உரிய பாதுகாப்பு தர காவல்துறை உறுதுணையாக இருக்கும் எனகூறியதை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஜூன் 10




பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  கழிவறைக்கு வரும் பெண்களை
சுவர் ஏறி குதித்து வந்து மர்ம நபர்கள் ஆபாச படம் எடுத்த போது தட்டிக்கேட்ட பள்ளி மாணவியின் மேலாடையை கத்தியால் கிழித்து துன்புறுத்தல். முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெறிச்செயல் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியில் கிருஷ்ணவேணி அரசினர்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 1500 க்கும்  மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள பெண்கள் கழிவறை பின்புறம் உள்ள பகுதி இடிந்து சேதமடைந்தும் மேற்கூரை இல்லாததாலும் இப்பகுதியில் உள்ள சில சமூகவிரோதிகள்  கழிவறை  பின்புற வழியாக சென்று வருவதாகவும் மாணவிகளை கழிவறையில் செல்போன் வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும்,  கடந்த வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு மாணவி சரஸ்வதி  என்ற மாணவி கழிவறைக்குச் செல்லும்போது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து மாணவியை ஆபாச படம் எடுத்ததாகவும் அப்போது அந்த மாணவி புகைப்படம் எடுக்காதீர்கள் என தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது அப்போது மாணவியை அந்த மர்ம நபர் தாக்க முயற்சித்ததாகவும் தப்பியோடியபோது மாணவியின் முதுகில் கத்தியால் குத்தியதில்  சீருடை கிழிந்து மாணவி சம்பவ இடத்தில் மயக்கமடைந்துள்ளார். இந்த நிலையில் தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்து
மயக்கமடைந்த மாணவியை ஆசிரியரின் அறைக்கு கொண்டு வந்து மயக்கம் தெளியும் வரை படுக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு மாணவியின் பெற்றோருக்கு மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி தகவல் கொடுக்கப்பட்டதாகவும் பெற்றோர் வந்த பிறகு உங்கள் பெண்ணை மர்ம நபர் ஒருவர் ஆடையில் கத்தியால் குத்தி உள்ளார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கோபமடைந்துள்ளனர். ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமையாசிரியர் சரஸ்வதி என்பவர் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியதை ஏற்க மறுத்த பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகார் மனு அளித்துள்ளனர். புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த பள்ளிக்கல்வித்துறை, காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி மற்றும்
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் டி கே  சுப்பிரமணியம் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். பின்னர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது சமாதானம் அடையாத பெற்றோர் தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் சுற்றுச்சுவர் கழிவறைகள் போதுமான பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருப்பதால் அவற்றை சீர் செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் அரசு பெண்கள் படிக்கும் பள்ளியில் முறையான பாதுகாப்பு இல்லாததால் பள்ளியில் கழிவறை கூட செல்ல மாணவிகள் அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். பள்ளியை சுற்றி போதைப் பொருட்களும் மதுபானங்களும் அதிக அளவில் விற்பனை செய்வதாகவும் எந்த நேரமும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இப்பகுதி திகழ்வதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து சிசிடிவி கேமராக்கள் வைத்து பள்ளி மாணவிகள் வீடு திரும்பும் வரை உரிய பாதுகாப்பு தர காவல்துறை உறுதுணையாக இருக்கும் என காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி கூறியதை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர் பள்ளியை முற்றுகையிட்டதால் இப்பகுதியில் சுமார் 5 மணி நேரமாக பரபரப்பாக காணப்பட்டது.


Script in mail
Visual in ftp

File name ; 

TN_NMK_02_10_SCHOOL_MUTRUGAI_VIS_7205944.mp4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.