ETV Bharat / state

இடைத்தேர்தலை இப்படி கொண்டாடுங்க...! - ஆளும்கட்சிக்கு பொன்னாரின் பொறி பறக்கும் அறிவுரை! - nanguneri vikravandi result

நாமக்கல்: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும்விதமாக தமிழ்நாடு அரசு 26, 27, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

radhakrishnan
author img

By

Published : Oct 25, 2019, 4:09 PM IST


மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றதால் இதனைக் கொண்டாடும்விதமாகவும் அப்பகுதி மக்களுக்கு பரிசளிக்கும்விதமாகவும் வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடி மதுவில்லாத தீபாவளியைக் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், நாங்குநேரி தொகுதி மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றியதால்தான் தற்போது படுதோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர்கள் பண்டிகை காலங்களில்கூட வேட்டி சட்டைகள் அணியவிரும்புவதில்லை எனக் கூறிப்பிட்ட அவர், ஆனால் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி சட்டை அணிந்ததையடுத்து தமிழர்கள் இந்தத் தீபாவளி பண்டிகையின்போது கட்டாயம் வேட்டி சட்டை அணிவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!


மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றதால் இதனைக் கொண்டாடும்விதமாகவும் அப்பகுதி மக்களுக்கு பரிசளிக்கும்விதமாகவும் வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடி மதுவில்லாத தீபாவளியைக் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், நாங்குநேரி தொகுதி மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றியதால்தான் தற்போது படுதோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர்கள் பண்டிகை காலங்களில்கூட வேட்டி சட்டைகள் அணியவிரும்புவதில்லை எனக் கூறிப்பிட்ட அவர், ஆனால் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி சட்டை அணிந்ததையடுத்து தமிழர்கள் இந்தத் தீபாவளி பண்டிகையின்போது கட்டாயம் வேட்டி சட்டை அணிவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!

Intro:இடைத்தேர்தல் வெற்றியின் பரிசாக மதுவில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில்  தமிழக அரசு வருகின்ற 26,27,28 ஆகிய மூன்று நாட்களுக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் பேட்டி


Body:நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான அதிமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாகவும் அப்பகுதி மக்களுக்கு பரிசளிக்கும் விதமாக வரும் 26,27,28 ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவில்லாத தீபாவளியாக கொண்டாட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணை பிறப்பிக்க வேண்டும். நாங்குநேரி தொகுதி மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றியதால் தான் தற்போது படுதோல்வி அடைந்ததாகவும் பாரத பிரதமரை போல் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் தமிழறிஞர்கள் யாரும் தமிழை பெருமைப்படுத்தியதில்லை என்றும், கடந்த காலங்களில் தமிழர்கள் பண்டிகை காலங்களில் கூட வேஷ்டி சட்டைகள் அணிய விரும்புவதில்லை. ஆனால் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேஷ்டி சட்டை அணிந்ததையடுத்து தமிழர்கள் இந்த தீபாவளி பண்டிகையின் போது கட்டாயம் வேஷ்டி சட்டை அணிவார்கள், என நாமக்கல்லில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.