ETV Bharat / state

நாமக்கல்லில் சாலைவிதி மீறியவர்களிடமிருந்து 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

நாமக்கல்: 2019ஆம் ஆண்டில் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 1, 2020, 6:01 AM IST

Breaking News

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், காவல் துறையினர் சார்பில், சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியும் சாலை விபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, "இந்தாண்டு விபத்தில்லா ஆண்டாகவும் பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் இன்று இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

2016ஆம் ஆண்டு 520 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதன்காரணமாக மூன்று ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக உயிரிழப்புகள் குறைந்தன. அதன்படி 2019ஆம் ஆண்டு 316 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு

இதேபோல், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறையும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் 2018ஆம் ஆண்டு 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர். 2019ஆம் ஆண்டு 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ''அபராதம் வாங்கவில்லை'' சமூகவலைதளங்களில் பரவும் போக்குவரத்து ஆய்வாளரின் மோசடி!

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், காவல் துறையினர் சார்பில், சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியும் சாலை விபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, "இந்தாண்டு விபத்தில்லா ஆண்டாகவும் பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் இன்று இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

2016ஆம் ஆண்டு 520 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதன்காரணமாக மூன்று ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக உயிரிழப்புகள் குறைந்தன. அதன்படி 2019ஆம் ஆண்டு 316 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு

இதேபோல், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறையும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் 2018ஆம் ஆண்டு 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர். 2019ஆம் ஆண்டு 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ''அபராதம் வாங்கவில்லை'' சமூகவலைதளங்களில் பரவும் போக்குவரத்து ஆய்வாளரின் மோசடி!

Intro:2019ம் ஆண்டு சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுவோரிடமிருந்து 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பேட்டிBody:நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் சார்பில் இன்று நள்ளிரவு நாமக்கல் பேருந்து நிலையம் அருகே விபதில்லா ஆண்டாக அனுசரிக்கப்பட்டது. காவல்துறையினர் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியும் சாலைவிபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பேசுகையில் இந்தாண்டு விபத்தில்லா ஆண்டாகவும் பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் இன்று இருச்சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கடந்த 2016ம் ஆண்டு 520 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும் அதன்காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 2019ம் ஆண்டு 316 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறையும் எனவும் மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் கடந்த 2018ம் ஆண்டு 1.50கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர். தற்போது 2019ம் ஆண்டு 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.