ETV Bharat / state

நாமக்கல்லில் ஜரூராக நடந்த குழந்தை விற்பனை.. மருத்துவர், புரோக்கர் மீது நடவடிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:37 PM IST

Updated : Oct 16, 2023, 10:43 PM IST

நாமக்கல்லில் தம்பதியிடம் குழந்தையை விற்பனை செய்ய அனுகிய மருத்துவர், புரோக்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

police arrested doctor and broker who involved in selling children in Namakkal district Tiruchengode
குழந்தை விற்பனை செய்த மருத்துவர் புரோக்கர் கைது

நாமக்கல்: திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள் நாகஜோதி தினேஷ் தம்பதிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராதா என்பவர், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவருக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் இரண்டு லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்க வற்புறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் நகர போலீசார் மருத்துவர் அனுராதா, குழந்தை விற்பனை புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில் இவர்கள் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்து இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை நடந்துவரும் நிலையில் மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களையும் விரைவில் கைது செய்வோம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள குழந்தைகள் விற்பனையாளர் லோகாம்பாள் குழந்தைகள் தத்தெடுக்கும் மையம் வைத்திருப்பதாகவும், அதன் மூலம் பணம் பெற்றுக் கொண்டு குழந்தைகளை பெற்று விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் திருச்சி, சேலம், குமாரபாளையம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல பெண்கள் தொடர்பில் உள்ளதாகவும், டாக்டர் அனுராதா ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் கருக்கலைப்புக்காக தனது தனியார் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் கருக்கலைப்பு செய்ய வேண்டாம் குழந்தையை பெற்றுக் கொடுத்தால் விற்று தருவதாக கூறி மூன்று லட்சம் பெற்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது‌‌.

இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் அனுராதாவை பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்..

நாமக்கல்: திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள் நாகஜோதி தினேஷ் தம்பதிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராதா என்பவர், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவருக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் இரண்டு லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்க வற்புறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் நகர போலீசார் மருத்துவர் அனுராதா, குழந்தை விற்பனை புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில் இவர்கள் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்து இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை நடந்துவரும் நிலையில் மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களையும் விரைவில் கைது செய்வோம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள குழந்தைகள் விற்பனையாளர் லோகாம்பாள் குழந்தைகள் தத்தெடுக்கும் மையம் வைத்திருப்பதாகவும், அதன் மூலம் பணம் பெற்றுக் கொண்டு குழந்தைகளை பெற்று விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் திருச்சி, சேலம், குமாரபாளையம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல பெண்கள் தொடர்பில் உள்ளதாகவும், டாக்டர் அனுராதா ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் கருக்கலைப்புக்காக தனது தனியார் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் கருக்கலைப்பு செய்ய வேண்டாம் குழந்தையை பெற்றுக் கொடுத்தால் விற்று தருவதாக கூறி மூன்று லட்சம் பெற்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது‌‌.

இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் அனுராதாவை பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்..

Last Updated : Oct 16, 2023, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.