ETV Bharat / state

வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளிவந்த பெண்ணிடம் கொள்ளை!

நாமக்கல்: வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்த பெண்ணிடம் இருந்து பணப்பையை பிடுங்கிக்கொண்டு தப்பி ஓடிய இரு நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author img

By

Published : Oct 1, 2019, 12:05 AM IST

namakkal

நாமக்கல் மாவட்டம், வண்டிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மரகதம். இவர் இன்று மதியம் இரண்டு மணியளவில், ரங்கர் சன்னதி தெருவிலுள்ள இந்தியன் வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பணப்பையுடன் வெளியே வந்துள்ளார்.

அப்போது, வங்கியின் வெளியே நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள், திடீரென அப்பெண் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனைத் தடுக்குமாறு அப்பெண் அலறியடித்து கூச்சலிட்டும், கொள்ளையர்கள் வேகமாக ஓடிச்சென்றுவிட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ரங்கர் சன்னதி தெருவிலுள்ள இந்தியன் வங்கி

காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடிய இரு நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாதா ஆலயத்தில் கீரிடம், நெக்லஸ் திருட்டு - போலீஸ் வலைவீச்சு!

நாமக்கல் மாவட்டம், வண்டிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மரகதம். இவர் இன்று மதியம் இரண்டு மணியளவில், ரங்கர் சன்னதி தெருவிலுள்ள இந்தியன் வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பணப்பையுடன் வெளியே வந்துள்ளார்.

அப்போது, வங்கியின் வெளியே நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள், திடீரென அப்பெண் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனைத் தடுக்குமாறு அப்பெண் அலறியடித்து கூச்சலிட்டும், கொள்ளையர்கள் வேகமாக ஓடிச்சென்றுவிட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ரங்கர் சன்னதி தெருவிலுள்ள இந்தியன் வங்கி

காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடிய இரு நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாதா ஆலயத்தில் கீரிடம், நெக்லஸ் திருட்டு - போலீஸ் வலைவீச்சு!

Intro:நாமக்கல்லில் வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்த பெண்ணிடம் பணப்பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓட்டம்... நாமக்கல் போலீசார் விசாரணை




Body:நாமக்கல்லில் வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்த பெண்ணிடம் பணப்பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓடினர். நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் வண்டிக்காரன் தெருவை சேர்ந்தவர் மரகதம். இவர் இன்று மதியம் 2 மணி அளவில்  ரங்கர் சன்னதி தெருவில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து  ஒரு இலட்ச ரூபாய் பணம் எடுத்து கொண்டு நடந்து சென்றார். அப்போது அவரை வங்கியிலிருந்தே நோட்டமிட்ட இரு இளைஞர்கள் மரகதமிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் அடங்கிய பையை பிடுங்கி கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் சம்பவ குறித்து மரகதம் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான குழு வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மக்கள் கூட்டம் இருக்கும் பிரதான சாலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் மக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.