நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அருந்ததியர் தெருவில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தவர் முத்து(75). இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கனமழை காரணமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து முத்துமீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தென்னை மரத்தில் விழுந்த இடி - அதிர்வில் மூதாட்டி உயிரிழப்பு, சுயநினைவு இழந்த மாணவர்!