ETV Bharat / state

கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!

author img

By

Published : Apr 10, 2020, 7:20 AM IST

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவரை கைது செய்த காவல்துறையினர், சாராயம் தயாரிப்பதற்காக போடப்பட்டிருந்த ஊறல்களை அழித்தனர்

கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!
கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கூடுதுறை பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் ஆய்வை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த கூடுதுறையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாராயம் தயாரிப்பதற்காக காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள குட்டுக்காடு பகுதியில் ஊறல் போடப்பட்டிருப்பது தெரியவத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சுமார் 50 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் செந்தில்குமார் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மின் கட்டணத்தை ரத்து செய்ய முதலமைச்சருடன் பேச வேண்டும் - மின்துறை அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கூடுதுறை பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் ஆய்வை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த கூடுதுறையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாராயம் தயாரிப்பதற்காக காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள குட்டுக்காடு பகுதியில் ஊறல் போடப்பட்டிருப்பது தெரியவத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சுமார் 50 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் செந்தில்குமார் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மின் கட்டணத்தை ரத்து செய்ய முதலமைச்சருடன் பேச வேண்டும் - மின்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.