ETV Bharat / state

'தானியங்கி இயந்திரங்களில் குடிநீர் விற்பனை...!' - கள் இயக்கத் தலைவர் நல்லசாமி வேதனை

author img

By

Published : Sep 3, 2019, 8:26 AM IST

நாமக்கல்: தமிழ்நாடு அரசு குடிநீரை மக்களுக்கு தானியங்கி இயந்திரங்கள் மூலம் விற்பனை செய்துவருவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது என தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி தெரிவித்தார்.

கள் நல்லசாமியின் பேட்டி

கள் இயக்கத் தலைவர் நல்லசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதிற்கு வாழ்த்துகள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 48 விழுக்காடு பருவமழை குறைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக மேட்டூர் அணை உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

கள் நல்லசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், தற்போது மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீரானது கடைமடை வரை சென்று அடையுமா என்பது கேள்விக்குறியாகும். மேலும், விவசாயிகள் நேரடி விதைப்பின் மூலமாக விவசாயம் மேற்கொண்டுவருகின்றனர். எனவே மேட்டூர் அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீரை திறந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பது தவறில்லை, ஆனால் அந்த நோக்கம் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்" எனக் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தானியங்கி இயந்திரங்களின் மூலமாக அரசு விற்பனை செய்துவருவதற்கு தனது வேதனையையும் அவர் தெரிவித்தார்.

இந்திய அளவில் தேங்காய் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை சுட்டிக்காட்டிய நல்லசாமி, ஆனால் தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். எனவே உடனடியாக அந்த தடையை தமிழ்நாடு அரசு நீக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

கள் இயக்கத் தலைவர் நல்லசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதிற்கு வாழ்த்துகள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 48 விழுக்காடு பருவமழை குறைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக மேட்டூர் அணை உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

கள் நல்லசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், தற்போது மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீரானது கடைமடை வரை சென்று அடையுமா என்பது கேள்விக்குறியாகும். மேலும், விவசாயிகள் நேரடி விதைப்பின் மூலமாக விவசாயம் மேற்கொண்டுவருகின்றனர். எனவே மேட்டூர் அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீரை திறந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பது தவறில்லை, ஆனால் அந்த நோக்கம் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்" எனக் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தானியங்கி இயந்திரங்களின் மூலமாக அரசு விற்பனை செய்துவருவதற்கு தனது வேதனையையும் அவர் தெரிவித்தார்.

இந்திய அளவில் தேங்காய் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை சுட்டிக்காட்டிய நல்லசாமி, ஆனால் தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். எனவே உடனடியாக அந்த தடையை தமிழ்நாடு அரசு நீக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

Intro:தமிழக அரசு குடிநீரை விற்பனை செய்வது மிகவும் வேதனைக்குரியது - தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி நாமக்கல்லில் பேட்டி.


Body:நாமக்கல்லில் கள் இயக்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் " தெலுங்கானா ஆளுநராக தமிழிசை செளந்திர ராஜன் நியமிக்கபட்டத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 48% பருவமழை குறைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக மேட்டூர் அணை உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் வெட்டி அந்த நீரை திருமணிமுத்தாறு,சரபங்கா,வசிஷ்ட நதி போன்றவற்றுடன் இணைத்தால் சேலம்,நாமக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறமுடியும்.மேலும் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி நீர் பாசனவசதிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீரானது கடைமடை வரை சென்று அடையுமா என்பது கேள்வி குறியாகும். மேலும் விவசாயிகள் நேரடி விதைப்பின் மூலமாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே மேட்டூர் அணையிலிருந்து 24 ஆயிரம் கன அடி நீரை திறந்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும்.

முதல்வர் வெளிநாடுகள் சென்று முதலீடுதளை ஈர்ப்பது தவறில்லை ஆனால் அந்த நோக்கம் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அரசு மூலமாக தானியாங்கு இயந்திரங்களின் மூலமாக விலைக்கு விற்பனை செய்துவருகின்றது.விவசாயிகளிடமிருந்து பெறும் அரிசியை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வரும் சூழலில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்குவது அரசின் தலையாய கடமையாகும். ஆனால் அதனை மறந்து குடிநீரை விற்பனை செய்வது வேதனையான செயலாகும் என தெரிவித்தார். மேலும் இந்திய அளவில் தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அந்த தடையை தமிழக அரசு நீக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.