ETV Bharat / state

விடிய விடிய வாழை மரங்களை வெட்டி சாய்த்த அடையாளம் தெரியாத நபர்கள்!

நாமக்கல்: முன்னாள் கவுன்சிலருக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Dec 4, 2019, 7:18 PM IST

வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர் அப்பகுதியில் உள்ள அரை ஏக்கர் நிலத்தில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களைப் பயிரிட்டுள்ளார்.

இன்னும் 2 மாதத்தில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்த அவருடைய வாழை மரங்களை நேற்று, நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது.

வெங்கரை பகுதியில் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் மரங்கள் வெட்டி கிடப்பதைப் பார்த்து, நிலத்தின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த முருகன் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

அழியும் நிலையில் உள்ள அரியவகை மகுடம் சூடிய பட்டாம்பூச்சி!


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர் அப்பகுதியில் உள்ள அரை ஏக்கர் நிலத்தில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களைப் பயிரிட்டுள்ளார்.

இன்னும் 2 மாதத்தில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்த அவருடைய வாழை மரங்களை நேற்று, நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது.

வெங்கரை பகுதியில் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் மரங்கள் வெட்டி கிடப்பதைப் பார்த்து, நிலத்தின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த முருகன் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

அழியும் நிலையில் உள்ள அரியவகை மகுடம் சூடிய பட்டாம்பூச்சி!

Intro:பரமத்தி வேலூரை அடுத்த வெங்கரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்ப்பு இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.Body:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விவசாயி முருகன் என்பவர் அப்பகுதி காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் அரை ஏக்கர் நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை பயிரிட்டுள்ளார். தற்போது வாழை மரங்கள் நன்கு வளர்ந்து இன்னும் 2 மாதத்தில் அறுவடை செய்யும் தருவாயில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் முருகனுக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் உள்ள அனைத்து வாழை மரங்களையும் வெட்டி சாய்த்து உள்ளனர்.

அப்பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு குளிக்கச் செல்லும்போது மரங்கள் வெட்டி கிடப்பதைப் பார்த்து நிலத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த முருகன் மரங்கள் வெட்டி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வாழை மரங்களை வெட்டிய மர்ம நபர்களை குறித்து வழக்கு பதிவு செய்து முன்பகை காரணமாக மரங்கள் வெட்டப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.