ETV Bharat / state

சார்ஜ் போட்டபடி செல்ஃபோனில் பேசியவருக்கு நேர்ந்த கதி! - நாமக்கல்லில் சோகம் - பள்ளிபாளையம் அருகே செல்போனில் சார்ஜ் போட்டப்படி பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே செல்ஃபோனில் சார்ஜ் போட்டபடி பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

namakkal
author img

By

Published : Sep 27, 2019, 11:04 AM IST

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசித்துவருபவர் ராமகிருஷ்ணன் மகன் தேவேந்திரன் (27). இவர் ஈரோட்டிலுள்ள தனியார் செல்ஃபோன் நிறுவனத்தில் கைப்பேசி கோபுர மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் இவர், தனது வீட்டில் செல்ஃபோனிற்கு சார்ஜ் போட்டபடியே, அதில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் பேசிய செல்ஃபோனில் வெப்பம் அதிகமாகி மின்கசிவு ஏற்பட்டதோடு தேவேந்திரன் மீது பாய்ந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்த வேகத்தில் தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே அங்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

செல்ஃபோன் பேட்டரி வெடித்து சிதைந்த சிறுவனின் கை! - மகாராஷ்டிராவில் சோகம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசித்துவருபவர் ராமகிருஷ்ணன் மகன் தேவேந்திரன் (27). இவர் ஈரோட்டிலுள்ள தனியார் செல்ஃபோன் நிறுவனத்தில் கைப்பேசி கோபுர மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் இவர், தனது வீட்டில் செல்ஃபோனிற்கு சார்ஜ் போட்டபடியே, அதில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் பேசிய செல்ஃபோனில் வெப்பம் அதிகமாகி மின்கசிவு ஏற்பட்டதோடு தேவேந்திரன் மீது பாய்ந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்த வேகத்தில் தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே அங்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

செல்ஃபோன் பேட்டரி வெடித்து சிதைந்த சிறுவனின் கை! - மகாராஷ்டிராவில் சோகம்

Intro:பள்ளிபாளையம் அருகே செல்போனை சார்ஜ் போட்டப்படி போன் பேசியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்புBody:நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பள்ளி பகுதியில் தேவேந்திரன் என்ற வாலிபர் செல்போன் சார்ஜர் போட்டு போன் பேசியபோது மின்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் தேவேந்திரன் (27) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் டவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர்
தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜர் போட்டுக்கொண்டு போன் பேசியபோது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் உடலை பள்ளிபாளையம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.