ETV Bharat / state

மண உறவைத் தாண்டிய காதலியின் தங்கை மகள் மீது மோகம்: இரட்டைக் கொலையில் முடிந்த சம்பவம்! - நாமக்கல் ராசிபுரம் ஆசிட் வீச்சு

நாமக்கல்: மூதாட்டியை கொலை செய்த கொலையாளியை ஊர் மக்கள் ஒன்றுகூடி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

namakkal rasipuram murdered killed by villagers
நாமக்கல் ராசிபுரம் ஆசிட் வீச்சு
author img

By

Published : Dec 14, 2019, 11:22 AM IST

Updated : Dec 14, 2019, 6:12 PM IST

நாமக்கல் மாவட்டம் குருசாமிப்பாளைத்தைச் சேர்ந்தவர் தனம். 65 வயதாகும் இவரின் கணவர் கந்தசாமி சில காலங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். தனம் தனது இரண்டு மகன்கள், மூன்று மகள்களுக்குத் திருமணம் முடித்துவைத்து, தற்போது தனியாக வசித்துவந்தார். மூன்றாவது மகளான விஜயாவின் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் பேருந்து விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தறுவாயில் விஜயாவுக்கு தருமபுரியைச் சேர்ந்த சாமுவேல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருங்கிய உறவாக மாறியிருக்கிறது. ஆனால் சாமுவேலுக்கோ விஜயாவை விடுத்து, அவர் தங்கை மகளான வசந்தி மீது மோகம் வந்துள்ளது. வசந்தியை அடைய நினைத்த சாமுவேலை பலமுறை, விஜயாவின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

கணவரைத் தாக்கி, கர்ப்பிணிப் பெண்ணைச் சீரழித்த கும்பல்... நடந்தது என்ன?

இதில் ஆத்திரமடைந்த சாமுவேல், அமிலம், கத்தி ஆகிய ஆயுதங்களுடன் வசந்தியைக் கடத்த, இன்று அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். சாமுவேலின் எதிர்பார்ப்பைத் தகர்க்கும் வகையில் அங்கு வசந்தியின் பாட்டி தனம் மட்டும் இருந்துள்ளார். மேலும் கோபமடைந்த சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு மிரட்டியுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை! நடந்தது என்ன?

அவரது மிரட்டலுக்கு அஞ்சிய தனம் கூக்குரலிட, ஊர் மக்கள் வீட்டின் முன் திரண்டுள்ளனர். தன்னை தற்காத்துக்கொள்ள ஊர் மக்களின் மீது அமிலம் வீசி பயமுறுத்தியுள்ளார் சாமுவேல். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் டிபன் கடை... மாலையில் செயின் பறிப்பு! - ஆடம்பரமாக வாழ பெண் செய்த பகுதி நேர வேலை

காவல் துறையினர் வந்து சாமுவேல் கட்டுப்பாட்டில் உள்ள தனத்தை மீட்கப் பலகட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சாமுவேல் தனம் மீது அமிலத்தை ஊற்றியதோடு தாக்கி அவரை கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஒன்றுகூடி சாமுவேலை இரும்புக் கம்பியாலும், தடியாலும் கடுமையாகத் தாக்கினர். இதில் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

‘நாகைக்கு எதற்கு 2ஆவது மருத்துவக்கல்லூரி... மயிலாடுதுறைக்குக் கொடுங்கள்’ - பொதுமக்களின் ஏக்கம்!

இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த காவல் துறையினர் தனம், கொலையாளி சாமுவேல் ஆகியோரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஊர் மக்கள் ஒன்றுகூடி அடித்துக்கொன்ற சம்பவம்

கொலையாளி சாமுவேலின் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளியைப் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குருசாமிப்பாளைத்தைச் சேர்ந்தவர் தனம். 65 வயதாகும் இவரின் கணவர் கந்தசாமி சில காலங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். தனம் தனது இரண்டு மகன்கள், மூன்று மகள்களுக்குத் திருமணம் முடித்துவைத்து, தற்போது தனியாக வசித்துவந்தார். மூன்றாவது மகளான விஜயாவின் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் பேருந்து விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தறுவாயில் விஜயாவுக்கு தருமபுரியைச் சேர்ந்த சாமுவேல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருங்கிய உறவாக மாறியிருக்கிறது. ஆனால் சாமுவேலுக்கோ விஜயாவை விடுத்து, அவர் தங்கை மகளான வசந்தி மீது மோகம் வந்துள்ளது. வசந்தியை அடைய நினைத்த சாமுவேலை பலமுறை, விஜயாவின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

கணவரைத் தாக்கி, கர்ப்பிணிப் பெண்ணைச் சீரழித்த கும்பல்... நடந்தது என்ன?

இதில் ஆத்திரமடைந்த சாமுவேல், அமிலம், கத்தி ஆகிய ஆயுதங்களுடன் வசந்தியைக் கடத்த, இன்று அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். சாமுவேலின் எதிர்பார்ப்பைத் தகர்க்கும் வகையில் அங்கு வசந்தியின் பாட்டி தனம் மட்டும் இருந்துள்ளார். மேலும் கோபமடைந்த சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு மிரட்டியுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை! நடந்தது என்ன?

அவரது மிரட்டலுக்கு அஞ்சிய தனம் கூக்குரலிட, ஊர் மக்கள் வீட்டின் முன் திரண்டுள்ளனர். தன்னை தற்காத்துக்கொள்ள ஊர் மக்களின் மீது அமிலம் வீசி பயமுறுத்தியுள்ளார் சாமுவேல். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் டிபன் கடை... மாலையில் செயின் பறிப்பு! - ஆடம்பரமாக வாழ பெண் செய்த பகுதி நேர வேலை

காவல் துறையினர் வந்து சாமுவேல் கட்டுப்பாட்டில் உள்ள தனத்தை மீட்கப் பலகட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சாமுவேல் தனம் மீது அமிலத்தை ஊற்றியதோடு தாக்கி அவரை கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஒன்றுகூடி சாமுவேலை இரும்புக் கம்பியாலும், தடியாலும் கடுமையாகத் தாக்கினர். இதில் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

‘நாகைக்கு எதற்கு 2ஆவது மருத்துவக்கல்லூரி... மயிலாடுதுறைக்குக் கொடுங்கள்’ - பொதுமக்களின் ஏக்கம்!

இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த காவல் துறையினர் தனம், கொலையாளி சாமுவேல் ஆகியோரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஊர் மக்கள் ஒன்றுகூடி அடித்துக்கொன்ற சம்பவம்

கொலையாளி சாமுவேலின் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளியைப் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Intro:கள்ளக்காதலியின் தங்கை மகள் மீது மோகம், கடத்த முயன்றபோது தடுத்த மூதாட்டி மீது ஆசிட் வீசி கொலை, பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தாக்கியதில் கொலையாளி உயிரிழப்பு, இராசிபுரம் போலீசார் விசாரணைBody:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி தனம் (65) கணவர் இறந்தநிலையில் 2 மகன் மற்றும் மூன்று மகள்களுக்கு திருமணம் செய்தபின் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் மூன்றாவது மகள் விஜயா தர்மபுரியை சேர்ந்த கள்ளகாதலன் சாமுவேல் என்பவரிடம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாமுவேல் விஜயாவின் தங்கை மகள் வசந்தி மீது ஆசைப்பட்டு அடைய விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்க்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் இன்று வசந்தியை கடத்த முயற்சி செய்ய ஆசிட் மற்றும் கத்தியுடன் வீட்டினுல் சென்றுள்ளார். அப்போது வீட்டில் பாட்டி தனம் மட்டும் இருந்துள்ளர். அப்போது வசந்தியை தன்னுடன் அனுப்பும்மாறு மிரட்டியுள்ளார். இதில் அலரிய மூதாட்டி தனம் சத்தம்போட்டுள்ளார். உடனடியாக அருகில் உள்ள அப்பகுதி மக்கள் கூடவே பயந்துபோன சாமுவேல் யாராவது வந்தால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என மிரட்டி அப்பகுதி மக்கள் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் அப்பகுதியை சேர்ந்த 10 க்கு மேற்பட்டோர் மீது ஆசிட் பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மூதாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் சாமுவேல் வீட்டில் இருந்த மூதாட்டி தனத்தை ஆசிட் வீசி கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வெளியில் இருந்த பொதுமக்களை தாக்க முயற்சி செய்தார். இதில் சுற்றியுள்ள பொதுமக்கள் இரும்பு பைப் மற்றும் தடியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சாமுவேல் பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையில் காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியை தாக்கி கொலை செய்து நபரை பொதுமக்களே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனது. மேலும் பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சாமுவேல் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.Conclusion:
Last Updated : Dec 14, 2019, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.