ETV Bharat / state

சோதனைச் சாவடியில் டேரா போட்ட பறக்கும் படை.. தேர்தல் பணி தீவிரம்

author img

By

Published : Mar 5, 2021, 5:33 PM IST

Updated : Mar 5, 2021, 6:17 PM IST

நாகை: 11 மாவட்ட, மாநில சோதனைச் சாவடிகளில் 18 தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணி தீவிரம்
தேர்தல் பணி தீவிரம்

சட்டப்பேரவை தேர்தல் தேதி, அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட, மாநில சோதனைச் சாவடிகளில் 18 தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தமிழ்நாடு எல்லையான கீழவாஞ்சூர் சோதனைச் சாவடியில், காவல் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். மேலும், கூரியர் நிறுவன வாகனங்கள், பேருந்துகளில் சோதனை மேற்கொண்ட அவர்கள் மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி, அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட, மாநில சோதனைச் சாவடிகளில் 18 தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தமிழ்நாடு எல்லையான கீழவாஞ்சூர் சோதனைச் சாவடியில், காவல் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். மேலும், கூரியர் நிறுவன வாகனங்கள், பேருந்துகளில் சோதனை மேற்கொண்ட அவர்கள் மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Last Updated : Mar 5, 2021, 6:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.