ETV Bharat / state

திருடு போன சிலைகள் திருக்குவளை அருகே மீட்பு - ஒருவர் கைது! - நாகப்பட்டினம் கோயிலில் கொள்ளை போன சிலை

நாகப்பட்டினம்: கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகளை திருக்குவளை அருகே காவல் துறையினர் மீட்டனர்,

கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள்
author img

By

Published : Aug 21, 2019, 5:08 PM IST

நாகை மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடி முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை, மாரியம்மாள் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளைபோயிருந்தன.

திருடு போன சிலைகளை திருக்குவளை அருகே காவல் துறையினர்மீட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளை போன சிலைகள், திருக்குவளை அருகே உள்ள ராமன்கோட்டகம் கிராமத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் ராமன் கோட்டகம் காலனி தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது வீட்டை சுற்றிவளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, சாக்கு மூட்டையில் மூன்று சிலைகள் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் உடனடியாக அதனை கைப்பற்றினர். பின்பு சிலைகளை பதுக்கி வைத்திருந்த வேதாரண்யம் மறைஞாயநல்லூரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். மேலும் கொள்ளை போன மற்ற சிலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றது.

கைப்பற்றப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் எனவும் இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடி முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை, மாரியம்மாள் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளைபோயிருந்தன.

திருடு போன சிலைகளை திருக்குவளை அருகே காவல் துறையினர்மீட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளை போன சிலைகள், திருக்குவளை அருகே உள்ள ராமன்கோட்டகம் கிராமத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் ராமன் கோட்டகம் காலனி தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது வீட்டை சுற்றிவளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, சாக்கு மூட்டையில் மூன்று சிலைகள் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் உடனடியாக அதனை கைப்பற்றினர். பின்பு சிலைகளை பதுக்கி வைத்திருந்த வேதாரண்யம் மறைஞாயநல்லூரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். மேலும் கொள்ளை போன மற்ற சிலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றது.

கைப்பற்றப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் எனவும் இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Intro:கோடியக்கரை கோவிலில் கொள்ளை போன சிலைகள் திருக்குவளை அருகே மீட்பு: ஒருவர் கைது: சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் வலைவீச்சு:Body:கோடியக்கரை கோவிலில் கொள்ளை போன சிலைகள் திருக்குவளை அருகே மீட்பு: ஒருவர் கைது: சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் வலைவீச்சு:


நாகை மாவட்டம், கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த முருகன் ,வள்ளி, தெய்வானை, மாரியம்மாள் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளை போயிருந்தன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த இந்நிலையில், கோடியக்கரை கோவிலில் கொள்ளை போன சிலைகள் திருக்குவளை அருகே உள்ள ராமன்கோட்டகம் கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராமன் கோட்டகம் காலனி தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் வீட்டை சுற்றிவளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்குமூட்டையில் மூன்று சிலைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனடியாக அதனை கைப்பற்றினர். இதையடுத்து சிலைகளை பதுக்கி வைத்திருந்த வேதாரண்யம் மறைஞாயநல்லூரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் மேலும் கொள்ளை போன மற்ற சிலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் மதிப்புடையது எனவும் இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்த பட இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் வேதாரண்யம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.