ETV Bharat / state

கோயிலில் திருடு போன 4 சிலைகள் மீட்பு!

நாகை: கோடியக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயில் கருவறையிலிருந்து திருடப்பட்ட 4 உலோக சிலைகளை போலீசார் மீட்டனர்.

author img

By

Published : Aug 24, 2019, 10:52 PM IST

Updated : Aug 25, 2019, 5:00 AM IST

statue_recovery_in kodiyakarai

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயில் கருவறையிலிருந்து பழமை வாய்ந்த நான்கு உலோக சிலைகள் கடந்த மாதம் 14ஆம் தேதி திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இது தொடர்பாக வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த லோகஸ்வரன்,உதயராஜன், சதாசிவம் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு (வள்ளி,தெய்வானை) உலோக சிலைகள் மீட்கப்பட்டன.

statue_recovery_
திருடப்பட்ட சிலைகள் மீட்பு

மேலும் திருடுவதற்கு பயன்படுத்திய இண்டிகோ காரையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற காவலில் எடுத்து மீதமுள்ள இரண்டு சிலைகளை மீட்க அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேலும் சிலருக்கு இச்சிலைக் கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் ராமன் கோட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை கைது செய்து மீதமுள்ள இரண்டு( அம்மன்,முருகன்) சிலைகள் மீட்கப்பட்டன.

statue_recovery_
திருடப்பட்ட சிலைகள் மீட்பு

திருடப்பட்ட நான்கு சிலைகளின் மதிப்பு சுமார் ரூபாய் 40 லட்சத்திலிருந்து 45 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயில் கருவறையிலிருந்து பழமை வாய்ந்த நான்கு உலோக சிலைகள் கடந்த மாதம் 14ஆம் தேதி திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இது தொடர்பாக வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த லோகஸ்வரன்,உதயராஜன், சதாசிவம் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு (வள்ளி,தெய்வானை) உலோக சிலைகள் மீட்கப்பட்டன.

statue_recovery_
திருடப்பட்ட சிலைகள் மீட்பு

மேலும் திருடுவதற்கு பயன்படுத்திய இண்டிகோ காரையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற காவலில் எடுத்து மீதமுள்ள இரண்டு சிலைகளை மீட்க அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேலும் சிலருக்கு இச்சிலைக் கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் ராமன் கோட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை கைது செய்து மீதமுள்ள இரண்டு( அம்மன்,முருகன்) சிலைகள் மீட்கப்பட்டன.

statue_recovery_
திருடப்பட்ட சிலைகள் மீட்பு

திருடப்பட்ட நான்கு சிலைகளின் மதிப்பு சுமார் ரூபாய் 40 லட்சத்திலிருந்து 45 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Intro:கோடியக்கரை கோடி முத்து மாரியம்மன் கோயிலில் திருடு போன 4
சிலைகள் மீட்பு, 5 குற்றவாளிகள் கைது.Body:கோடியக்கரை கோடி முத்து மாரியம்மன் கோயிலில் திருடு போன 4
சிலைகள் மீட்பு, 5 குற்றவாளிகள் கைது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த
கோடியக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோவில் கருவறையிலிருந்து பழமை வாய்ந்த
4 உலோக சிலைகள் கடந்த மாதம் 14-தேதி மர்ம நபர்களால் திருடப்பட்டது, அதனை தொடர்ந்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன்,
உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை
மேற்கொண்டு வந்த நிலையில் வேதாரண்யம் மறையாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த லோகஸ்வரன், உதயராஜன், சின்னதும்பரை சேர்ந்த சதாசிவம் ஆகியோரை கடந்த 21-ம் தேதி கைது
செய்து அவர்களிடமிருந்து வள்ளி, தெய்வவானை 2 உலோக சிலைகள் மீட்கப்பட்ன, மேலும்
அவர்கள் திருட பயன்படுத்திய இண்டிகோ காரும் ஒரு இருசக்கர
வானத்தையும் பறிமுதல் செய்த போலீசார் மேற்படி
குற்றவாளிகள் மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு அவர்களிடம் நடத்திய
விசாரணையின் அடிப்படையில் மீதமுள்ள இரண்டு சிலையாளை மீட்க தீவிர நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த
கிருபாகரன் மற்றும் ராமன்கோட்டகத்தை சேர்ந்த பாண்டியன் ஆகியோர் தனி படை போலீசார் இன்று கைது
செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து திருடுபோன மீதமுள்ள இரண்டு
உலோக சிலைகள் (அம்மன், முருகன்) 328 கிராம் எடையுள்ள புள்ளி கிரீடமும்
மீட்கப்பட்டது, அதனை தொடர்ந்து குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். காணாமல் போன நான்கு
சிலையின் மதிப்பு சுமார் 40 லட்சத்திலிருந்து 45 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.Conclusion:
Last Updated : Aug 25, 2019, 5:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.