ETV Bharat / state

வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பள்ளி மாணவி - போலீஸ் தீவிர விசாரணை

author img

By

Published : Nov 10, 2019, 11:52 AM IST

Updated : Nov 10, 2019, 12:50 PM IST

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தில் பள்ளி மாணவி ஒருவர், வீட்டின் பின்புற தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவி இறப்பு குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தமிழரசன். இவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கவிதா, உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டின் பின்புறமுள்ள கொல்லைப் புறத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கவிதாவை காணாமல் போனதாக எண்ணி அக்கம்பக்கம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர்.

பள்ளி மாணவி இறப்பு குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர்

பின்னர், தோட்டத்தின் பின்புறமுள்ள பகுதியில் கவிதா மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கவிதாவை சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, திருவெண்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கவிதாவின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், கவிதாவின் உடலில் கீறல்கள், காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : கழுத்து அறுபட்ட நிலையில் தொழிலாளி உடல் மீட்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தமிழரசன். இவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கவிதா, உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டின் பின்புறமுள்ள கொல்லைப் புறத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கவிதாவை காணாமல் போனதாக எண்ணி அக்கம்பக்கம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர்.

பள்ளி மாணவி இறப்பு குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர்

பின்னர், தோட்டத்தின் பின்புறமுள்ள பகுதியில் கவிதா மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கவிதாவை சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, திருவெண்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கவிதாவின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், கவிதாவின் உடலில் கீறல்கள், காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : கழுத்து அறுபட்ட நிலையில் தொழிலாளி உடல் மீட்பு!

Intro:சீர்காழி அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் சாவு, எஸ்.பி நேரில் விசாரணை:-Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தில் பள்ளி மாணவி வீட்டின் கொல்லைப்புற தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் திருவெண்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் விவசாயி. இவரது மகள் ஆஷிகா வயது 15 அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ஆஷிகா உடைகளை மாற்றிக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள கொல்லைப் புறத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் ஆஷிகா காணாமல் போனதாக அக்கம், பக்கம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். பின்னர், தோட்டத்தின் பின்புறமுள்ள பகுதியில் ஆஷிகா மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆஷிகாவை சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆஷிகா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி ஆஷிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தது சித்தன் காத்திருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து உடல் கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஆஷிகாவின் உடலில் கீறல்கள், காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.Conclusion:
Last Updated : Nov 10, 2019, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.